-->

திங்கள், 30 மே, 2011

ஜாதிகள் உள்ளதடி பாப்பா!!!

பத்து, பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள்  வெளியாகிவிட்டன... மதிப்பெண்களை அள்ளிக்குவித்துள்ளனர் மாணவர்கள்...

இம்முறை நகர்புற மாணவர்களை விட கிராமத்து மாணவர்கள்தான் அதிக மதிப்பெண்களை குவித்துள்ளனர்...

இதற்கான காரணங்களை நாம் இங்கு ஆராயப்போவதில்லை...

அன்று அம்பேத்கர் நிர்ணயித்தார் பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் இட ஒதுக்கீடு இருக்கக்கூடத் என்று...

ஒரு நல்ல எண்ணத்தோடு அவர் கொண்டு வந்த முறை சரியாக பயன்படுத்தப்படாமல் வெறும் அரசியலுக்காகவே பயன்பட்டுக்கொண்டிருக்கிறது...

நாடு முழுவதும் 6 வயது முதல் 14 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய மற்றும் இலவசக் கல்வி அளிக்க வகைசெய்யும் கல்வி உரிமை மசோதா நாடாளுமன்றத்தில் 6 ஆகஸ்ட் 2009இல் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது... இம்மசோதாவினை திடமாக அமல் படுத்தினாலே எதிர்காலத்தில் இடஒதுக்கீடு தேவையிலாமல் போகும்... பத்தாம் வகுப்பு முடிப்பதற்கு முன்பே, பல குழந்தைகள் பள்ளியிலிருந்து வெளியேறும் வேலையில், உயர் கல்விக்கு இட ஒதுக்கீடு எதற்கு?

இக்கால சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு என்பது ஒரு நிரந்தர சலுகையாகிவிட்டது...


எந்த பெரியார், ஜாதிகள் இருக்ககூடாது என்று போராடினாரோ, இன்று அவர் பெயரில் இயங்கிக்கொண்டிருக்கும் பெரியார் மணியம்மை பல்கலைகழகம், மாணவர் சேர்கையின் பொழுது ஜாதிவாரியாக இடம் ஒதுக்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது... அந்த நிலைமையில் அவரது சிந்தனைகளை பாதுகாக்கிறார்கள் அவரது தலையாயத்  தொண்டர்கள்...

இப்படியாக ஒரு குழந்தை ஆரம்பக்காலப் பள்ளியில் சேரும்பொழுதே விண்ணப்பப்படிவத்தில் சாதியினைக் குறிப்பிடச்செய்வது, கட்சித்தலைவர்கள், தங்களைப்பற்றி உண்மைச்செய்திகளை மக்களுக்கு விளக்கும்படியாக பத்திரிக்கைகளில் வந்தால் அந்தப்பத்திரிக்கையினை ஜாதியின் பெயரைச் சொல்லி அவதூறு கூறுவது, அகில இந்திய அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு செய்வது, மேற்படிப்பிற்கு குறைந்த மதிப்பெண் போதும் என்று அந்த மாணவர்களை சோம்பேரிகலாக்குவது என்று எதில் காணிலும் ஜாதியினை புகுத்தி அரசியல் செய்யும் இக்காலத்தில், பாரதி பாடிய

ஜாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாபம்

என்று பாடியது பொய்யாகி,

ஜாதிகள் உள்ளதடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் அரசியல் என்று தான் பாடவேண்டும்.
Blogger Widget

1 கருத்து:

  1. தாமரைக்கண்ணன்6 ஜூன், 2011 அன்று AM 12:27

    நண்பர் பார்கவ் இதற்கு ஏன் பதில் தெரிவிக்கவில்லை என்று புரியவில்லை!!!
    Baby RAMACRSHNA - நீங்கள் எந்த அர்த்தத்தில் புரிந்துகொண்ட கருத்து தெரிவித்துள்ளீர் என்று புரியவில்லை.
    ஆனால் ஒன்றுமட்டும் புரிகிறது... உங்கள் கருத்து துளியும் இந்த தலைப்பிற்கு சமந்தம் இல்லாதது என்று.!!
    (அதனால் தான் பார்கவ் பதில் கருத்து தெரிவிக்காமல் விட்டு விட்டாரோ!)

    பதிலளிநீக்கு