-->

சனி, 30 டிசம்பர், 2017

கருத்துக்களம் 2017இன் சிறந்த வலைப்பூவாக தேர்வு செய்யப்பட்டது!

மூன்று மாதங்களுக்குமுன் கருத்துக்களம் வலைப்பூ 2017இன் சிறந்த வலைப்பூ என்ற விருதுக்கு IndiBlogger நடத்திய 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த எழுத்தாளர்க்கான போட்டியில் தாக்கல் செய்யப்பட்டது. http://www.karutthukkalam.com/2017/09/2017.html

இன்று IndiBlogger (30 டிசம்பர் 2017) நடத்திய பிரம்மாண்டமான விருது வழங்கும் விழாவில் 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த வலைப்பூவாக கருத்துக்களம் தேர்வு செய்யப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்!

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விருது பெற்றவர்களுக்கான பட்டியலை காண்க!

https://www.indiblogger.in/iba/2017/winners/regional-languages

Winner of The Indian Blogger Awards 2017 - Regional Languages

#IBA2017 
Blogger Widget

புதன், 27 டிசம்பர், 2017

இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 7 | வாயை மூடி (விலை) பேசவும்

சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி...

முந்தைய அத்தியாயம் (6) படித்துவிட்டு வாசகர்களிடமிருந்து பெரிதாக கருத்துக்கள் ஏதும் வரவில்லை என்று எனக்கு வருத்தம். ஹ்ம்ம்.. ஆனால் கோடிகளை ஆயிரக்கணக்கில் கொள்ளை அடித்த கேடிகள் எல்லாம் நல்லவர்கள், மேஜையின் கீழ் கட்டுக்கட்டாக நோட்டுகளை கொடுத்தாலும் வாங்க தெரியாத மகான்கள் என்று "நியாயவாதி நீதிபதி" தீர்ப்பு கொடுத்ததை பார்த்து வந்த வருத்தத்தை விட இது பெரிதல்ல.


ராஜு... போயி ஒரு ரூபாய்க்கு பச்சைமிளகாய், ஒரு ரூபாய்க்குகருவேப்பிலை வாங்கிண்டு வா - என்று என் அம்மா நான் சிறு வயதில் இருக்கும்போது சொல்வார். பின்னர் அது இரண்டு ரூபாய்க்கு என்று மாறியது. அப்படியே எனக்கு கடலை மிட்டாய் வாங்க ஒரு ரூபாய் கொடுப்பார். நானும் ஓடி சென்று உடனே வாங்கி வருவேன். சிலருக்கு வீட்டு வாசலிலேயே மளிகை கடை இருக்கும். அண்ணாச்சி அரை கிலோ ரவை குடுங்க இதோ வந்து காசு தரேன் என்றும், பன்னீர் சோடா குடித்த பின்னர் காசு எடுத்து வர மறந்ததை தலையை சொரிந்த படியே அன்னே.. காசு கொண்டு வர மறந்துட்டேன், இதோ இருங்க எடுத்துட்டு வரேன் என்று சொன்ன அனுபவம் பலருக்கும் நடந்திருக்கும். கடைக்கு பதினைந்து ரூபாய் எடுத்து சென்று பத்து ரூபாய்க்கு துக்ளக் பத்திரிகை வாங்கி, ஒரு Rose Milkகும் குடித்துவிட்டு வருவேன். 

உழவர் சந்தைக்கு சென்று காய்கறிகள், பழங்கள் வாங்க சென்றால் சில சமயங்களில் நாமே வியக்கும் படி விலை உயர்ந்திருக்கும். மழை வந்து வாழை தோப்பெல்லாம் வீணாகிடிச்சுப்பா அதான் இந்த தடவை சுகந்தம் பழம் (இது ஓசூர் ஸ்பெஷல் வாழை ரகம்!) விலை ஏறிடுச்சு என்றும்  ரஸ்தாளியை டசன் இருபத்து ஐந்து ரூபாய்க்கே வாங்கி பழகி அதை தடால் என்று நாற்பது ரூபாய் என்று சொன்ன போதெல்லாம் ஒரு ஐந்து ரூபாய் குறைத்து கேட்டு வாங்கியது ஒரு காலம்.

வேலை கிடைத்த பின்னாட்களில், எவ்வளவோ பொருட்களெல்லாம் அநியாய விலை விற்க, வியர்வை சிந்தி நாளெல்லாம் ரோட்டில் கடைபோட்டு, தலையை சொரிந்தும், தொப்பையையும் தடவிக்கொண்டும் வரும் போலீசுக்கு ஓசியில் ஒரு டசன் பழம் கொடுத்து, தொந்தரவு தராமல் இருக்க அடிக்கடி ஐம்பது ரூபாய் கொடுத்தும், மழை வரும்போது அப்படியே தள்ளுவண்டியை தார்பாய் போட்டு மூடி, ஓடி பின்னே இருக்கும் மருந்துக்கடையில் கதவருகே மழைக்கு ஒதுங்கியும், மாலைவேலையில் தள்ளுவண்டியின் கீழே பஞ்சாயத்து யூனியன் ஸ்கூலில் படிக்கும் தன் குழந்தை உட்கார்ந்து பள்ளிப்பாடங்களை படித்துக்கொண்டிருக்கும்.

இதற்கு அடுத்தபடியாக பீரோவோ அல்லது சோஃபாவோ வாங்க கடைக்கு சென்றால், கடை முன்னே வைத்திருக்கும் மரச்சாமான்களின் மேல் ரோட்டில் செல்லும் வண்டிகளால் படிந்த தூசியை கடைக்கார பையன் தட்டிக்கொண்டிருப்பான். கடையில் இருக்கும் ஐந்து வித  சோஃபாவில் ஒன்றை தேர்ந்தெடுத்து "என்ன பாய் நீங்க, நம்மக்கிட்டயே இந்த விலை சொல்றீங்க!  கம்மிபண்ணுங்க பாய்..." என்று பதினோராயிரம் விலை சொன்ன சோஃபாவை ஒன்பதாயிரத்து முந்நூறு வரை பேரம்பேசி ஒரு minidor வேனில் பொருளுடன், இரண்டு ஆட்களை அனுப்பி வைப்பார் கடை முதலாளி. எவ்வளவு கனமாக இருந்தாலும் பாவம் அவர்களே இறக்கி, மாடி வீடோ, சந்தில் இருக்கும் வீடோ அவர்களே சுமந்துக்கொண்டு வந்து நம் வீட்டில் வைப்பார்கள்.

தெருவில் விநாயகர் வைக்க நன்கொடை கேட்டு வரும் பசங்களுக்கு நூறு ரூபாய்க்கு கீழ் கொடுத்தால் அடுத்த தடவை நாம் ரோட்டில் நடந்து செல்லும்போது பசங்கள் கூட்டம் நம்மை பார்க்கும் பார்வையே வேறு.  ஆனால் நாம் வாங்கிய பொருளின் சுமையை தாங்கி வந்து வீட்டில் வைக்கும் கடைக்கார பையன்களுக்கு ஏதோ தர்மத்துக்கு பணம் கொடுப்பதாக பலருக்கு நினைப்பு. தாராள மனமுடையவர்களாக இருந்தால் ஆளுக்கு ஐம்பது ரூபாய் கொடுப்பர், சிலர் இருவருக்கும் சேர்த்து வெறும் நாற்பது ரூபாயை கொடுத்துவிட்டு ஏதோ பெரிதாக காசு மிச்சம் பிடித்ததாக வீட்டில் பீற்றிக்கொள்வர்!

இப்படியாக ஒவ்வொருநாளும் ஒரு அனுபவம். இதுதான் நம் நடைமுறையும் கூட. இதை மொத்தமாக தவறு என்று சொல்லவில்லை, இதில் எங்கெங்கே தவறு இருக்கிறது என்று சொல்ல ஆரமித்தால் அதற்கே தனி அத்தியாயம் தேவைப்படும்.

நம் நாட்டில் இவையெல்லாம் இப்படி இருக்க, இங்கே மேற்கண்ட இந்த விஷயங்களில் மட்டும் இந்நாட்டில் என்ன மாறுதல்கள் என்று பார்ப்போம்.

நம்மூரில் கிடைக்கும் அனைத்துப் பொருட்களும் இங்கே கிடைக்கும். குறிப்பாக நியூ ஜெர்சியில் கிடைக்காத, இந்தியாவில் விற்கும் பொருள் எது என்று விரல் விட்டு எண்ணிவிடலாம். மல்லிகைப்பூ, கனகாம்பரம், ரோஜாப்பூ, வெற்றிலை, காய்கறிகள், பருப்பு வகைகள், மற்ற சமையல் சாமான்கள், அம்பிகா அப்பளம், பதஞ்சலியின் நூடுல்ஸை சந்தையில் புழலவிட தற்காலிகமாக நம்மூரில் தடையிலிருந்த போதும் அந்த தடை செய்யப்பட்ட மாகி நூடுல்ஸ், வறட்டி, கோமியம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இதை எல்லாம் முதலில் இங்குள்ள கடைகளில் பார்த்த போது மிக ஆச்சர்யமாக இருந்தது. இருக்காதா பின்ன!

இதில் விஷயம் என்னவென்றால், இங்கே காய்கறிகள் இறக்குமதி செய்தாலும் அதற்கு ஏதோ விதிமுறைகளெல்லாம் இருக்கின்றன, இரண்டு ஆண்டுகளுக்கு முன் சில மாதங்களுக்கு நம் நாட்டிலிருந்து பச்சைமிளகாய் இங்கே இறக்குமதி செய்ய தடை விதித்திருந்தார்கள். அதில் நச்சுத்தன்மை வாய்ந்த பூச்சிக்கொல்லி மருந்தின் தன்மை அதிகமாக காணப்பட்டதால் அதை தடை இந்தியாவிலிருந்து இங்கே ஏற்றுமதி செய்ய இந்தியாவிற்கு தடை விதித்திருந்தார்கள். இதை ஆராய ஒரு அமைப்பு இருப்பதே அப்போதுதான் எனக்கு தெரியும். இங்கே ஏற்றுமதிக்கு தடை என்றால், அந்த சமயத்தில் அதை நம் நாட்டில் நம் தலையில் கட்டி ஏகபோகமாக விற்றிருப்பார்கள். ஹ்ம்ம்...

பெரும்பாலான மாநிலங்களில் இங்கிருக்கும் முக்கிய இந்திய மளிகைக்கடை Patel Brothers என்னும் கடை. பின் Subzi Mandi, அது இது என சில பெயர்களில் பல கடைகள் இருக்கும். நம் சமையலுக்கு தேவையான பொருட்களை இங்கு மட்டும் தான் வாங்க முடியும். பொன்னி அரிசி, சோனா மசூரி என்று நம்மூரில் கிடைக்கும் அனைத்து அரிசி வகைகளும், இதயம் நல்லெண்ணெய், நரசூஸ் காபி பொடி, நன்னாரி சர்பத் கூட கிடைக்கும். இங்கு கிடைக்கும் சில பொருட்கள் நம்மூரிலேயே இப்போதெல்லாம் தேடித் தேடித்தான் வாங்க வேண்டும்.

எந்த பொருளாக இருந்தாலும் என்ன விலை போட்டிருக்கிறதோ அந்த விலைதான்! நம்மூரிலேயே இப்போதெல்லாம் AC போட்டு மளிகை சாமான் விற்கும் கடைகளில் "என்னது! Ruchi palm oil எழுபது ரூபாயா! இதெல்லாம் நான் நாற்பத்தைந்து ரூபாய்க்குலாம் வாங்கியிருக்கேன்! ஹ்ம்ம்.. என்ன விலை விக்கறானுங்களோ!!"  என்று எப்படி வாயைமூடி மனதுக்குலேயே விலை பேசிக்கொள்கிறோமோ அதுபோலத்தான் இங்கேயும். தோசைமாவு, இட்லி மாவு, ரெடிமேட் சப்பாத்தி எல்லாம் சில நேரங்களில் அதிக விலை போல தோணினாலும் இவையெல்லாம் கிடைக்கின்றனவே அதுவே பெரிய விஷயம் என்று தான் தோணும். இப்போதெல்லாம் சில மாநிலங்களில் இருக்கும் அமெரிக்க கடைகளிலேயே நம் பருப்பு, அரிசி வகைகள் விற்க ஆரமித்துவிட்டனர். (இதை பார்த்து இந்த டிரம்ப் தாத்தா ஏதும் பண்ணாம இருக்கணும்!)

எங்கள் ஓசூரில் தயாராகும் GRB நெய் இங்கே கிடைக்கிறது!
மன்னார்குடியில், மயிலாடுதுறையில் என் சிறு வயதுமுதல் விரும்பிக் குடித்த நன்னாரி சர்பத் இங்கே கிடைக்கிறது!
மளிகை சாமான்கள் தவிர, மரச்சாமான்கள், Chair, என்று எது வாங்கினாலும் தன் கையே தனக்கு உதவி தான்! அதாவது... நம்மூரில் வண்டியுடன் கூடவே வரும் கடை பசங்க, மினிடோர் வண்டி, போனால் போகட்டும் என்று நம் சுமையை தூக்கிவந்து வீட்டில் வைக்கும் கடை பையன்களுக்கு தருகிற ஐம்பது ரூபாய் இது எதுவும் இங்கே கிடையாது. இங்கே இந்த வீட்டு பொருட்கள் விற்கும் கடை இதுதான் என்று அவ்வளவு சிரிய பட்டியல் போட்டுவிட முடியாது.

Walmart, Costco, IKEA, Target, Matress Firm என்று எந்த கடைக்கு சென்றாலும் அந்த பொருள் எப்படி இருக்கும் என்று Sampleகாக ஒரு சோஃபாவோ, shelfபோ வெளியே வைத்திருப்பார்கள். எந்த பொருள் வேண்டுமோ அதை பக்கத்திலேயே ஒரு அட்டைப்பெட்டியில் வைத்திருப்பார்கள். இதுவே IKEA என்ற கடையில் பெரிய கிடங்கு போன்ற இடத்தில் பல ராக்குகளில் அடுக்கி வைத்திருப்பார்கள். அந்தந்த பொருள் எந்த ராக்கில் இருக்கிறது என்பதை ஒரு பேப்பரில் குறித்துக்கொண்டு கடையை முழுதும் சுற்றி பார்த்து வெளியே செல்லும் இடத்தில் இந்த கிடங்கை தாண்டி billing கவுண்டர்க்கு  செல்லும்போது பணத்தை கட்டிவிட்டு, எவ்வளவு பெரிய பொருளாக இருந்தாலும் பெரிய்ய trolley இருக்கும், அதில் நாம் தான் அதை வைத்து தள்ளிக்கொண்டு வண்டியில் ஏற்றி, கயிறு கட்டி (வண்டி நிறுத்தும் இடத்திலேயே கயிறு பெரிய rollலில் இருக்கும்) எடுத்து செல்ல வேண்டும்.


இப்படி விலைப்பட்டியலில் எந்த ரேக்கில் இந்த பொருள் இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கும்.

இப்படி அந்த ராகில் நாம் வாங்கப் போகும் பொருள் அட்டைப்பெட்டியில் இருக்கும்.
எந்த பொருளாக இருந்தாலும் அட்டை பெட்டியினுள் அதற்கு தேவையான Screw, அதை திருகுவதற்கு திருகான் (screw டிரைவர் அல்ல, எளிதான திருகான் ஒன்று இருக்கும்), மற்ற அனைத்து தேவையான பொருட்களும், மேலும் அதை எப்படி assemble செய்வது என்பதற்கான வழிமுறைகளும் மிக தெளிவாக கொடுக்கப் பட்டிருக்கும். அதில் கொடுத்திருக்கும் வழிமுறைகளை பின்பற்றினால் பொருள் அதற்கான வடிவம் பெரும். எங்கள் வீட்டில் இருக்கும் நாற்காலி, கணினி வைக்கும் மேஜை, புத்தக அலமாரி,  டிவி வைக்கும் மேஜை, Fan என்று எல்லாமே நானே தான் செய்தேன். இப்படித்தான் இங்கிருக்கும் எல்லோருமே செய்வார்கள்.


இப்படி ஒவ்வொன்றும் நாமே assemble செய்ய ஆரமித்தால்தான் ஒரு பொருள் வடிவம் பெற எவ்வளவு மெனக்கெட வேண்டியிருக்கும் என்று புரியும், அந்த பொருளின் சுமை தெரியும், "ச்ச... இதே நம்ம ஊரா இருந்தா இந்த தொல்லையே இல்ல" என்றுதான் எல்லோருக்கும் முதலில் தோணும், ஆனால் இப்படி நாமே செய்வதால் ஒவ்வொரு பொருளையும் மேலும் பொறுப்புடன் கையாளத் தோணும். நம் நாட்டில் துரும்பைக்கூட கிள்ளிப்போடாத சோம்பேறிகளாக இருந்தாலும் இங்கே வந்தால் வீட்டுப் பொருட்களின் சுமையை தானே தான் சுமக்கவேண்டும்!
நிறைவடைந்த வடிவில் புத்தக அலமாரி. சோ அவர்கள் ஆசிரியராக இருந்தபோது வெளிவந்த துக்ளக். கடந்த செப்டம்பரில் வாங்கியது. அவர் நினைவாக வைத்துள்ளேன்.
அடுத்த அத்தியாயம் விரைவில்...

போக்குவரத்து - என்ற தலைப்பில் பிபிசி தமிழ் நடத்திய புகைப்படப் போட்டியில் நான் எடுத்த புகைப்படம் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பென்சில்வேனியாவில் அலங்கரிக்கப்பட்டுள்ள ஒரு கிராமம் - பார்கவ் கேசவன், ஒசூர் என்ற பெயரில் எனது படம் இடம் பெற்றிருக்கும். அதற்கான இணைப்பு இங்கே http://www.bbc.com/tamil/arts-and-culture-42456053 

இந்த தொடர் கட்டுரையை பற்றிய உங்கள் கருத்துக்களை மறவாமல் கீழே பதிவு செய்யுங்கள். எப்படி கருத்து தெரிவிப்பது என்பது சிரமமாக இருந்தால் bhargav.hsr@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் கருத்தை அனுப்பவும். நன்றி!
Blogger Widget

வியாழன், 14 டிசம்பர், 2017

இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 6 | போலாம் ரைட்...

பெங்களூரில் வேலைப் பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில், வார இறுதிக்கு ஓசூர் சென்றுவிடுவேன். திங்கட்கிழமை காலை ஓசூரிலிருந்து கிளம்பி பெங்களூருக்கு வேலைக்கு செல்வேன். பெரும்பாலும் silkboard flyover மேல் செல்லும் பேருந்தில் தான் செல்வேன், குறைந்தபட்சம் நாற்பது நிமிடங்கள் போக்குவரத்து நெரிசலிலிருந்து தப்பிக்க அதுதான் ஒரே வழி.

ஓசூர் பேரூந்து நிலையத்திலிருந்து பெங்களூருக்கு ஐந்து நிமிடத்துக்கு ஒரு வண்டி கிளம்பும். அதிலும் பலவிதமான வண்டிகள் உண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து, தமிழ்நாட்டிலிருந்து இயங்கும் தனியார் வண்டி, கர்நாடக அரசு போக்குவரத்து, கர்நாடகாவிலிருந்து இயங்கும் தனியார் வண்டி, இதுதவிர தனியார் company கார்கள், வேன்கள் மற்றும் காலை நேரத்தில் ஓசூர்-பெங்களூர் ரயில் வண்டி. இப்படி பல விதத்தில் தத்தம் சௌகரியத்துக்கு ஏற்றார் போல பெங்களூர் செல்ல வசதிகள் உண்டு.

இந்த தனியார் வண்டிகளில் செல்லும்போது பலவந்தமாக சில மொக்கை திரைப்படங்களை திருட்டு சிடியில் போட்டு சித்திரவதை செய்வார்கள். எப்படா ஊர் வரும் என்றிருக்கும். அப்படிப்பட்ட மொக்கை படம் எடுத்து அதை திரையரங்கில் வெளியிடுபவர்களுக்கே முதலில் தண்டனை குடுக்க வேண்டும்! பல சமயம் வேறு வழி இல்லாமல் இந்த சசிகுமார், சில பொறுக்கிகளை ஹீரோவாக சித்தரிக்கும் படங்களை எல்லாம் தவிர்க்க முடியாமல் பார்த்து நொந்திருக்கிறேன். அதிலும் ஏதோ RDX, DTS இருக்கும் நடமாடும் திரையரங்கு நடத்துவதாக நினைப்பு அந்த ஓட்டுநர், நடத்துனர்களுக்கு - காது கிழியும் அளவுக்கு சத்தம் பின்னாடி வரும் அரசு பேருந்துக்கே கேட்கும்!

19 ரூபாய், 28 ரூபாய் பயண சீட்டு விலை இருந்த காலத்தில் அந்த மீதி ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் சில்லறையை வாங்க நாம் படும்பாடு சொல்லி மாளாது! அந்த "ரெண்டம்பது" வடிவேலு comedy தான் நினைவுக்கு வரும். ஒருமுறை ஜன்னல் சீட்டில் உட்கார்ந்து அருமையான காற்று வீசிக்கொண்டிருந்த அந்த அருமையான பயணம் இந்த கண்டக்டர் நம்ம பாக்கி சில்லறையை குடுப்பானா என்ற சந்தேகத்தினாலேயே ரசிக்க முடியாமல் போனது! சந்தேகித்தது சரிதான் என்னும் வகையில் வேறு யாரோ ஒரு பயணிக்கும், எனக்கும் சேர்த்து ஒரு பத்து ரூபாயை என்னிடம் குடுத்து ரெண்டுபேரும் அஞ்சஞ்சு ரூபாய் பிரிச்சு எடுத்துக்கோங்க என்று இறக்கிவிட்டார்!

இது போதாதென்று திங்கட்கிழமை காலையில் வழக்கமாக போகும் வண்டியையே சும்மா ஸ்பெஷல் பஸ் என்று ஒரு ஸ்டிக்கரை மட்டும் ஒட்டிவிட்டு, ஐந்து ரூபாயை கூட்டி டிக்கெட் விலையை விற்பதும், இதற்காக பயணிகளுக்கும், நடத்துனருக்கும் வாக்குவாதம் நடப்பதும் பலமுறை பெரும்பாலோனோர்  அனுபவப்பட்ட விஷயங்கள். அந்தந்த நேரத்தில் இதெல்லாம் கடுப்பை கிளப்பும் நிகழ்வுகள் என்றாலும் இதெல்லாம் பெரும்பாலானோர் பலமுறை அனுபவப்பட்ட சம்பவங்கள் தானே! 

காலை ஒன்பது மணிக்குமுன் பெங்களூரு பஸ் பிடிக்க வேண்டும் என்றால், பேருந்து நிலையத்தினுள்  பஸ் நுழையும் முன்னரே பேருந்து நிலையத்தின் வாயிலிலிருந்து பஸ்சை துரத்தி சென்று உள்ளிருப்பவர்கள் இறங்குவதற்கு முன் அவர்களை மீண்டும் உள்ளேயே தள்ளி உட்கார வைக்கும் அளவுக்கு ஆக்ரோஷமாக போருக்கு செல்லும் வீரனை போல தள்ளுமுள்ளு நடத்தி, யோவ் இங்க நான் போட்ருந்த துண்டு எங்க? யோவ் அது என் கர்சீப்பு, குட்டி பசங்களை ஜன்னல் வழியே ஒரு மூணு பேர் சீட்டில் உக்கார வைத்து இடம்பிடிப்பது என்று பல வழிகளில் ஒரு மணிநேரம் செல்லும் பயணத்துக்காக ரகளை ரணகளமாக இருக்கும் பெரும்பாலான காலை நேரங்களில். (பின் குறிப்பு - மேற்கூறிய விஷயங்களில் துளியும் மிகைப்படுத்தி கூறவில்லை, நான் பெங்களூரு சென்ற சமயங்களில் நடந்த சில நிகழ்வுகள் தான் இவை.)

இப்படி ஓசூரிலிருந்து பெங்களூருக்கு பேருந்தில் சென்ற அனுபவம் பல இருக்க, இங்கு
நியூ ஜெர்சியியிலிருந்து நியூயார்க் செல்லும் அனுபவத்தைபற்றி தான் இந்த தலைப்பில் எழுதியிருக்கிறேன். 


முதல் நாள், நியூ ஜெர்சியில் நான் தங்கியிருக்கும் பார்சிபணியிலிருந்து (என்னது பாசிபருப்பா என்று தான் பலர் முதலில் கிண்டல் செய்வர், இந்த பெயரை முதலில் கேட்ட நான் உட்பட!) நியூயார்க் செல்ல பேருந்துக்கு காத்திருந்தேன். 7:20க்கு பேருந்து என்றால், 7:18க்கு பேருந்து நிறுத்தத்துக்கு சென்றால் போதும். சரியான நேரத்துக்கு பேருந்து வந்து நம்மை அசரவைக்கும்!அழகான பேருந்து நிறுத்தம். காத்திருந்தேன், நான் பேருந்து நிறுத்தத்துக்கு சென்றதற்கு முன் ஏற்கனவே ஒரு பெண் அங்கிருந்தார், அடுத்து நான் சென்றேன், பின்னர் இரண்டு பேர் வந்தனர். Bus Stop என்று வைத்திருந்த கம்பத்திற்கு முன் பேருந்து சரியாக நின்றது. (ஆச்சர்யம் தான்!)

அங்கிருந்தவர்கள் எங்கடா புஸ்ஸு, ஹாய் ஹூய் என்று எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல், ஹாயாக கைபேசியை பார்த்துக்கொண்டும், பெரிய, சிறிய என்று ரகரகமான ear phoneகளில் பாட்டு கேட்டுக்கொண்டும் நின்றிருந்தனர். நிழற்குடையினுள் நின்று இதையெல்லாம் நான் வேடிக்கை பார்த்துக்கொண்டும், நொடிக்கு ஒருமுறை இடப்புறம் திரும்பி பேருந்து வருகிறதா என்று பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். முதல் நாளல்லவா! பதட்டம் இருக்காதா என்ன?!

அதுவரை நிழற்குடையினுள் காத்திருந்த நான், பேருந்து வந்ததை பார்த்தவுடன் குடுகுடுவென முதலில் பேருந்தினுள் ஏற விரைந்து சென்றேன், புஸ்ஸ்ஸ் என சத்தத்துடன் பஸ்ஸின் கதவு திறந்தது (நம் ஊர் பேருந்துகளில் கதவை கயிற்றால் கட்டும் வழக்கம் இவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை!), எனக்கு முன்னரே பேருந்து நிறுத்தத்திற்கு வந்து காத்திருந்த பெண்மணி என்னை முறைக்காத குறையாக ஒரு மாதிரி பார்த்தார்... அப்போதான் சட்டென நினைவுக்கு வந்தது அடடா இது வெளிநாடு ஆச்சே!! இங்கே இப்படி எல்லாம் அடித்து பிடித்து என்ற மாட்டார்களே! என்று எங்கெங்கோ நான் படித்த, கேட்ட விஷயங்களெல்லாம் நினைவுக்கு வந்தது... உடனே பேச்சை மாற்றுவது போல ஏங்க... இந்த பஸ் நியூயார்க் போகுமா? என்று கேட்டு அவரை முன்னே செல்ல விட்டு என் வரிசையில் நான் ஏறினேன். 

பேருந்து நிறுத்தம் என்றாலும், பேருந்து நிலையம் என்றாலும், எத்தனை நபர்கள் இருந்தாலும் இங்கே First Come, First Serve தான். நாம் எந்த வரிசையில் ஒரு இடத்திற்கு செல்கிறோமோ அந்த வரிசையில் நமக்கான இடம் இருக்கும். ஓவுவர் பின் ஒருவராக மிக நீண்ட வரிசை நிற்கும் பெரிய பெரிய பேருந்து நிலையங்களில்! நூறு பேருக்கு மேலெல்லாம் நீண்ட வரிசையில் நிற்பதை தினமும் பார்க்கிறேன் தினமும். சில படங்கள், வீடியோ இங்கே கொடுத்துள்ளேன் காணுங்கள்.
இந்த படத்தை பார்த்துவிட்டு இதுதான் அந்த அழகான பேருந்து நிறுத்தமா என்று கேட்டுவிடாதீர்கள், இது நியூயார்க் பேருந்து நிலையம். நான்காவது மாடியிலிருக்கும் பேருந்து நிலையம். சாலையிலிருந்து flyover ஒன்று பேருந்து நிலையத்தின் கட்டிடத்துக்கு ஒவ்வொரு மாடிக்கு செல்லும். 

Port Authority Bus Terminal - இந்த பேருந்து நிலையத்தில் தான் இந்த வாரம் குண்டு வெடித்தது.
அப்படியாக முதல் நாள் பேருந்தில் ஏறி ஓட்டுனரிடம் எனது பயணசீட்டை கொடுத்துவிட்டு சென்று ஒரு இருக்கையில் அமர்ந்தேன். இங்கே நடத்துனர் என்று தனியாக பேருந்துகளில் கிடையாது. நியூஜெர்சியிலிருந்து நியூயார்க் செல்லும் பேருந்துகளுக்கு ஒரு கதவு தான். ஜன்னல்கள் எந்த பெருந்திலுமே கிடையாது, பெரிய முழுநீள கண்ணாடியுடன் தான் எல்லா பேருந்துகளும் இருக்கும். பேருந்தில் ஏறும்போது எந்த நிறுத்தம் என்று சொல்லிவிட்டு இருக்கையில் அமரவேண்டும், எல்லா இருக்கையும் நிறைந்திருந்தால் அடுத்த பேருந்தில் செல்ல சொல்லி, ஓட்டுனரே Walkie Talkie radioவில் operatorரிடம் சொல்லிவிடுவார். அடுத்த ஐந்து நிமிடத்தில் அடுத்த பேருந்து வரும். சில மாநிலங்களில் இது மாறுபடும். எல்லா மாநிலங்களிலும் இங்கு பேருந்து வசதி கிடையாது. குறிப்பாக லாஸ் எஞ்சலஸ், விர்ஜினியா போன்ற மாநிலங்கள். மற்ற இடங்களில் மணிக்கு ஒருமுறைதான் பேருந்து வசதி உண்டு. சில இடங்களில் அதுவும் கிடையாது.

பேருந்தின் ஒவ்வொரு இருக்கைக்கு புத்தகம் படிக்க light, சின்ன Fan இருக்கும் (நம் தமிழக அரசு UD வண்டி வந்த புதுசில் ஒரு குட்டி tablefan மாதிரி ஒன்றிருந்ததே... அதுபோல கிடையாது, lightடுக்கு பக்கத்தில் ceilingகுடன் சேர்ந்தாற்போல இருக்கும்). மேலும் அடுத்த நிறுத்தத்தில் இறங்க வேண்டும் என்றால் ஒவ்வொரு சீட்டுக்கு STOP என்ற button இருக்கும், அதை அழுத்தினால்  "stop requested" என்று ஓட்டுநர் இருக்கைக்கு மேல் ஒரு digital displayவில் வரும், அதை பார்த்து அடுத்த நிறுத்தத்தில் நிறுத்துவார். உள்ளூருக்குள் இயங்கும் பேருந்துகளில் வழக்கம் போல இரண்டு கதவுகளும், பஸ் பாஸ்களும் உண்டு, பஸ் பாஸ் மொபைல் போன், நம்மூரிலிருக்கும் அட்டை என்று பல விதங்களில் உண்டு.

ஒவ்வொரு பேருந்திலும் Heater, AC இரண்டுமே இருக்கும். பருவநிலைக்கு ஏற்ப ஓட்டுநர் அதை இயக்குவார். பெரும்பாலான ஓட்டுனர்கள் மிக தன்மையாக அனைவரிடமும் நடந்துகொள்வர். ஒருமுறை, ஒரு தாத்தாவை இறக்கிவிட ஓட்டுனரே பஸ்சிலிருந்து இறங்கி கொண்டுவிட்டார். இவ்வளவு கனிவு எல்லாம் நம்ம ஊருல எதிர்பார்க்கவில்லை, காலங்கார்த்தால பீப் போடும் அளவு கொச்சையாக ஓட்டுநர், நடத்துனர் பேசாமல் இருந்தாலே போதும் என்று தான் பல சென்னை வாசிகள் நினைப்பர். அவ்வளவு கனிவாக நடந்துக்கொள்வர் இங்கே.

ஒவ்வொரு பயணியரும் பேருந்தில் ஏறியதும் Good Morning அல்லது how are you doing என்றும் பேருந்திலிருந்து இறங்கும் போது Have a nice day அல்லது have a good one என்றும் சொல்லிவிட்டுத்தான் ஏறுவர், இறங்குவர். ஒவ்வொரு பயணியருக்கும் ஓட்டுனர் சிரித்தமுகத்துடனே பதிலளிப்பார். இதே பாணிதான் காபி கடை, taxi மற்றும் எல்லாஇடங்களிலும். முதலில் greet செய்துவிட்டு தான் அடுத்த பேச்சு!
படம்: Dummys Photography 
பெரும்பாலும் அனைத்து பேருந்துகளும் தனியார் பேருந்துகள்தான். NJ Transit, Lakeland, Coach USA என்று பல lease, sublease என்று அரசாங்க மானியத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள். பேருந்துகள் மட்டுமல்லாது ரயில்களும் தனியார் இயக்கம் தான். NJ Transit Train, Path Train, Bus, ferry (படகு) என்று பல வகையில் நியூ ஜெர்சியிலிருந்து நியூயார்க் செல்ல வசதிகள் உண்டு.  இத்தனை விதமாக இருந்தாலும் கட்டணமெல்லாம் அதிகம் தான், மாதம் பேருந்துக்கே $400 ஆகும்! நியூயார்க்கு பக்கத்திலேயே இருந்து ரயிலில் செல்பவர்களுக்கு $100க்குள் முடிந்துவிடும். 



மாற்று திறனாளிகள் தங்கள் சக்கரவண்டியை பேருந்தினுள் எடுத்து செல்லும் வகையில் கதவை இயக்கும் ஓட்டுநர். 
பெரும்பாலான பேருந்து நிறுத்தத்தில் "park & ride" என்று உண்டு. எல்லோருக்குமே வீட்டிலிருந்து நடக்கும் தூரத்தில் பேருந்து நிறுத்தம் இருக்காது, பெரும்பாலானோர் வீட்டிலிருந்து பேருந்து நிலையத்திற்கு காரில் சென்று, அங்கே காரை நிறுத்திவிட்டு பஸ் பிடித்து வேலைக்கு செல்வர். அப்படி பேருந்தில் செல்பவருக்கான வண்டி நிறுத்தும் இடம் தான் இந்த Park & Ride, இங்கு காலை முதல் மாலை வரை காரை நிறுத்துவிட்டு செல்ல தனியாக கட்டணமெல்லாம் கிடையாது! காலை பொழுதில் நியூயார்க் செல்லும் பேருந்துக்கு என, எதிர்புறம் வண்டி வரும் பக்கத்தில் ஒரு lane பேருந்துக்கு என ஒதுக்கியிருப்பார்கள். காலை பத்து மணி வரை இந்த bus lane இயங்கும்.

அனைத்து பேருந்திலும் மாற்று திறனாளிகள் செல்லும் வகையில் வசதி இருக்கும், சக்கர நாற்காலியில் பயணிப்பவர்கள், அந்த வண்டியுடனே பேருந்தினுள் ஏறும் வகையில் தானியங்கி கதவு தரையை ஒட்டி இறங்கும், சக்கர வண்டி உள்ளே சென்றவுடன் மற்றவர்கள் ஏறும் வகையில் படிகளை மேலே உயர்த்திவிடுவார் ஓட்டுநர். பெரும்பாலான பேருந்தில் முன் பக்கத்தில் மிதிவண்டி எடுத்து செல்லும்படி வசதி இருக்கும், ரயில்களில் பல பேர் மிதிவண்டி எடுத்து செல்வர். luggage எடுத்து செல்பவர் நம்மூர் kpn போன்ற தனியார் வண்டியில் கதவருகே இருக்கும் இடத்தில் luggage வைக்கும் இடம் போலவே இங்கு அனைத்து பேருந்துகளிலும் இருக்கும். பெரும்பாலான பேருந்தினுள் போன் பேசக்கூடாது. நம்மூரில் இப்படி இருந்தால், சம்மந்தமே இல்லாத ஒருவர் தன் ஊர் கதையை சொல்லிக்கொண்டு செல்வதை எல்லாம் கேட்காமலிருக்கலாம்!!! என்ன நடத்துனர் இல்லாமல் இருக்கும் இந்த பேருந்துகளில் தினமும் பயணம் செய்யும் பொது கேட்காமலிருக்கும் ஒரே சத்தம் நமூரில் கேட்கும் போலாம் ரைட்...

அடுத்த அத்தியாயம் விரைவில்...

"நீரும் நானும்" என்ற பிபிசி தமிழ் நடத்திய புகைப்படப் போட்டியில் நான் சமீபத்தில் எடுத்த புகைப்படம் ஒன்று தேர்வாகியுள்ளது"நியூ யார்க்கிலுள்ள வாட்கின்ஸ் க்லென்- ஓசூர் பார்கவ் கேசவன்" என்ற தலைப்பில் இந்த இணைப்பில் http://www.bbc.com/tamil/arts-and-culture-42276359 படத்தை காணவும். நான் எடுத்த மற்ற புகைப்படங்களை காண முகநூலில் என் Dummys Photography என்ற எனது புகைப்பட பக்கத்தை பின்தொடரவும். https://www.facebook.com/dummysphotography/

இந்த தொடர் கட்டுரையை பற்றிய உங்கள் கருத்துக்களை மறவாமல் கீழே பதிவு செய்யுங்கள். எப்படி கருத்து தெரிவிப்பது என்பது சிரமமாக இருந்தால் bhargav.hsr@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் கருத்தை அனுப்பவும். நன்றி!
Blogger Widget

புதன், 29 நவம்பர், 2017

இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 5 | புது வெள்ளை மழை!


நினைவிருக்கிறதா? இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் ஏதோ பொறாமை வரும், கோவம் வரும் என்றெல்லாம் சொன்னேனே? அதில் பாதி எந்த இடத்தி என்று உங்களுக்கே தெரிந்திருக்கும். மீதி என்ன என்றால்... இப்படி பறந்து கிடைக்கும் அமெரிக்காவில் காட்டுக்கு நடுவே சென்றாலும் சாலை அற்புதமாக போடப் பட்டிருக்கும், ஒருசில இடம் கன்னாபின்னா மேடு, ஒரு வீடும் கண்ணுக்கு தென்படவில்லையே, இந்த பக்கம் ஒன்னும் இல்லையே, இது அடர்ந்த காடாச்சே, என்று என்னென்ன தோணுமோ அந்தந்த இடத்துக்கு சென்றாலும் அங்கெல்லாம் "தரமான ரோடு" போடப் பட்டிருக்கும். இந்த மூன்று ஆண்டுகளில் நான் குறைந்தது இருபதாயிரம் மைல்கள் பயணித்திருப்பேன், முகம் சுழிக்கும் அளவு எங்கும் சாலையை கண்டதில்லை. 

இங்கே பனிக்காலத்தில் சாலையில் பனி விரைவில்கரையவும், வண்டிகள் வழுக்காமல் செல்லவும்    கல்லுப்பு தூவுவார்கள்! பல truckகுகள் (தனியார் மற்றும் அரசு வண்டிகள்) தொடர்ந்து சாலையை சுத்தம் செய்துக்க கொண்டே இருக்கும், சாலையில் பனி இல்லாமல் , மக்கள் வேலைக்கு செல்ல சிரமம் இல்லாமல் இருக்க தொடர்ந்து பணியை அகற்றிக்கொண்டே இருப்பார்கள். அதே போல சாலையின் இரு புறமும் அங்கங்கே மழை தண்ர் செல்ல வடிகால் இருக்கும், எவ்வளவு பெரிதாக மழை வந்தாலும் சாலையில் தண்ணீர் தேங்கவே தேங்காது!

டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை அவ்வவ்போது பனி பொழியும். சில ஆண்டுகள் டிசம்பர், ஜனவரி மாதங்களில் பெய்த பனி கரைவதற்கு மே மாதம் இறுதி வரை கூட ஆகும். இந்த பனியை பற்றி சொல்லும் போதே உங்களுக்கு தெரிந்திருக்கும், இந்த தலைப்பு அமெரிக்காவில் உள்ள பருவ காலங்களைப் பற்றி தான் இந்த தலைப்பு என்று! ஆம், இங்கிருக்கும் பருவ காலங்களை பற்றி இந்த தலைப்பில் பார்ப்போம்.

2015இல் பெய்த பெரும் பனிக்கு (Blizzard) அடுத்த நாள் எடுத்த படம்.
இங்கு நான் வந்திறங்கியது அக்டோபர் மாதம். மரங்களில் உள்ள இலைகளெல்லாம் ஆரஞ்சு நிறத்திலும், மஞ்சள் நிறத்திலும், சிகப்பு நிறத்திலும் பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருந்தது. ஆஹா... சினிமாவில் வருவது போலவே இருக்கிறதே என்று மிக பரவசமாக இருந்தது. இப்படித்தான் எப்பொழுதும் இருக்கும் போல என்று நினைத்துக்கொண்டேன். ஒரு வாரம் இருக்கும், வழக்கம் போல அலுவலகம் செல்ல பேருந்து நிறுத்தத்திற்கு வழக்கமான பாதையில் நடந்து சென்றேன், மரங்களில் இருந்த இலைகளெல்லாம் உதிர்ந்திருந்தன! என்னடா இது... இவ்வளவு அழகா இருக்கே என்று நினைத்ததாலோ என்னவோ எல்லா இலைகளும் கொட்டி விட்டது என்று நினைத்துக்கொண்டே வருத்தத்தில் அன்று அலுவலகம் சென்றேன். பிறகு தான் இங்கிருக்கும் பருவ காலம் பற்றி புரிய ஆரமித்தது.

நம்மூரிலும் இலையுதிர் காலம் இருக்கிறது, நான் படித்த வேளாங்கண்ணி மேல்நிலைப் பள்ளியிலும், ஓசூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் முழு ஆண்டு பரிட்சை விடுமுறைக்கு முன்னர் பள்ளியிலிருக்கும் மரங்களிலிருந்து இலைகளெல்லாம் உதிர்ந்து இருக்கும், ஜூன் மாதம் பள்ளி திறக்கும் போது பச்சைபசேலென்று புதிதாக இலைகள் வந்திருக்கும். இதுதான் எனக்கு தெரிந்த இலையுதிர்காலம், ஆனால் இங்கோ... இலையுதிர்காலம் என்றால் நாட்டிலிருக்கும் மொத்த மரமும்மொட்டையாகிவிடுகிறது!


செப்டம்பர், அக்டோபர் மாதம் முதல் குளிர் ஆரமிக்கும். அக்டோபர் மாதம் முதல் பகலில் வெயிலும் (மிதமான வெயில் தான்!) இரவில் குளிரும் இருக்கும்... குளிர் அதிகமாக ஆக, பச்சை இலைகளெல்லாம் நிறம் மாற ஆரமிக்கும். ஒரு வேலை வெயில் அதிகமாக இருந்தால் நிறம் மாறுவதற்கு தாமதம் ஆகும். நியூ ஜெர்சியின் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பருவம் மாறும்.  அதாவது வடக்கில் குளிர் செப்டெம்பர் மாதமே ஆரமித்துவிடும். நியூ ஜெர்சியில் செப்டெம்பர் இறுதி அல்லது அக்டோபர் மாதம் ஆரம்பத்தில் குளிர் ஆரமிக்கும், அப்படியே வாஷிங்டன், விர்ஜினியா என்று தெற்கு நோக்கி செல்லும். சரி இதுல என்ன இருக்கு என்கிறீர்களா? ஆம், இதுல தான் விஷயம் இருக்கு.... இப்படி குளிர் ஆரமித்தவுடன் தான் இயற்கை விரும்பிகளுக்கு கொண்டாட்டமே. 

Bear Mountain 

எனது குடியிருப்பிலிருந்து ரெண்டு தெரு தள்ளி...

படங்கள்: நானே தான்!
குளிர் ஆரமித்த மாநிலங்களில் முதலில் இலைகளின் நிறம் மாற... மாற இயற்கையின் அழகு நாளெல்லாம் கண்டு கழித்தாலும் மேலும் மேலும் ரசிக்கத் தூண்டும். அந்த சமயங்களில் இந்த நிற மாற்றத்தை கண்டு களிக்க நாட்டின் பல பகுதிகளிலிருந்து மக்கள் கூட்டம் வரும், ஆனால் சரியான நாட்களில் வந்தால் தான் இந்த இயற்க்கை அழகை காண முடியும். அதனால் தான் இந்த நிறம் மாற்றங்களை கண்காணிக்க பல வலைத்தளங்கள் இருக்கின்றன. பல வலை தளங்களில் எழுதுபவர்கள் தினமும் சில முக்கிய இடங்களுக்கு சென்று புகைப்படம் எடுத்து இன்று இவ்வளவு விழுக்காடு நிறம் மாறியிருக்கிறது, அவ்வளவு விழுக்காடு இலைகள் உதிர்ந்திருக்கிறது என்று நேரடி update கொடுத்துக் கொண்டிருப்பர். இதை பொறுத்து தான் மக்கள் சுற்றிப்பார்க்க திட்டமிடுவர்.  குறிப்பிட்ட ஒரு வாரம் அலலது அதற்கும் குறைவான நாட்கள் மட்டும் தான் நிறங்கள் இருக்கும், இந்த காலத்தில் இலைகள் பலவீனமாக இருக்கும், அதனால் இந்த சமயத்தில் வரும் மழை, காற்று  போன்றவற்றால் நாளுக்கு நாள் இலைகள் உதிர்ந்துகொண்டே இருக்கும். 

மேலே குறிப்பிட்டது இது தான்!
இலைகள் முதலில் பச்சை நிறத்திலிருந்து மஞ்சள் நிறமாக மாறும், குளிரை பொறுத்து வேகமாக ஆரஞ்சு நிறத்துக்கு அடுத்து மாறும், அதிலிருந்து சிகப்பு நிறமாக மாறும், மழை, காற்றிலிருந்து தப்பியது என்றால் brown நிறமாக மாறி அதன் பின்னர் உதிர்ந்து விடும். மரத்தில் ஒரு இலைகூட இல்லாமல் மொட்டை மரமாக மூன்று மாதங்கள் இருக்கும். இதில் என்ன ஆச்சர்யம் என்றால் மொத்த நாடும், அல்லது எனக்கு தெரிந்தமட்டில் குறைந்தபட்சம் ஒரு இருபது மாநிலங்களிலாவது மொத்தம் மரமும் மொட்டையாக இருக்கும். இத்தனை நாள் வழி நெடுக்க பச்சை பசேலென்று இருந்த மரங்களெல்லாம் களையிழந்து இருக்கும். இதெல்லாம் சில நாட்களுக்கு தான்.... ஏனென்றால் இதன் பின்னர் தான் பனிகாலம்ஆரமித்து, மொட்டை மரங்களை பனி அலங்கரிக்கும்.

பெரும்பாலும் டிசம்பர் மூன்றாவது வாரம் முதலெல்லாம் பனி பொழிய ஆரமித்துவிடும். முதல் பனி கொள்ளை அழகு! ரோஜா படைத்து பாட்டுலதானேபனியை முதன் முதலில் பார்த்தோம்! நிச்சயம் நம் மக்கள் எங்கு கண்ணிலும் புகைப் படம் எடுத்துக்கொண்டிருப்பர். அதை பார்ப்பதே ஒரு அழகு! பொறுமையாக கவனித்தால் பனி ஒரு அழகு இலைபோல பொழியும். சாரல், தூறல், மழை... இதுபோல Flurry, Snow. எனக்கு தெரிந்து இது இரண்டு வார்த்தைகள் தான். Flurry என்பது சாரல், குட்டி தூறல் போல ஒவ்வொரு வெள்ளை பூ போல மென்மையாக வெள்ளை சாரல் பொழியும். இதுவே பெரிதாக வரும்போது மழைபோல பனி பொழியும். 

அங்கே தெரியும் Signalஐ தாண்டினால் எனது bus stop.   
பனியில் ஒரு மான் குட்டி!


இந்தப் படத்தில் இருப்பவர் தான் இதை எழுதிக்கொண்டிருக்கிறார்!
முன்பு சொன்னது போல தான், நியூ ஜெர்சியின் வடக்கிலிருந்து தெற்கே பனியின் அளவு மாறும். Maine, New Hampshire, Upstate New York (நயாகரா நீர் வீழ்ச்சி, அமெரிக்க - Canada எல்லை) பகுதியெல்லாம் பெரும்பாலும் அதிகமாக பனிபொழியும் இடங்கள். நியூ ஜெர்சியும் அதிகம் பனிபொழியும் இடம் என்றாலும் மேற் கூறிய இடங்களை விட குறைந்த அளவில் தான் பனி இருக்கும். இந்த மூன்று முதல் நான்கு மாதங்கள் குளிர் -25 வரை செல்லும். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் -29 ஆக இருந்தது குளிர். மொட்டை மரங்களெல்லாம் குல்லாய் போட்டது போல பனியால் மூடப்பட்டிருக்கும். பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும்!

இந்த குளிர் காலங்களில் மக்கள் அணியும் ஆடைகளும் மாறும். வெளியில் செல்ல வேண்டும் என்றாலும், வேலைக்கு செல்ல வேண்டும் என்றாலும் குளிருக்கான ஆடைகள் அணிவதற்க்கே கூடுதலாக ஒரு ஐந்து, பத்து நிமிடங்கள் ஆகும். Thermal Wear என்று ஒன்று உண்டு, சட்டை, pant இரண்டும் இருக்கும், உடம்பை சூடாக இருக்கு வைக்கும் ஆடை. இதை போட்டுக்கொண்டு, இதன் மேலே வழக்கமான சட்டை, pant அணிந்துக்கொண்டு, அதன் மேல் குளிருக்கான Jacket (ஆம், இப்படித்தான் சொல்கிறார்கள் அதன் பெயரை!), சிலர் அந்த jacket அணிவதற்கு முன் sweater கூட போட்டுக்கொள்வார்கள், அதன் பிறகு குல்லா, கைக்கு gloves... சப்ப்ப்ப்ப்பா... இதை type பண்ணவே அஞ்சு நிமிஷம் ஆயிடிச்சு!!

முகமூடி கொள்ளைக் காரன்!
இந்த குளிர் காலத்தில் பனிச்சறுக்கு, snow tubing, ice கட்டியில் சிற்பம் வடிப்பது போன்று பனி காலத்துக்கு ஏற்ப பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கும். பனிக்காலங்களில் எல்லாம் சூரியன் இருக்காதா என்ன என்று தோணலாம், இருக்கும்... மாலையில் வீட்டில் வெளிச்சத்துக்கு tubelight போட்டு தூங்கும் முன் அணைப்பதுபோல வெறும் வெளிச்சத்துக்காக மட்டும் தினமும் சூரியன் வந்துபோகும். உடம்பில் சூடு உரைக்கவே உரைக்காது. ஆனால் பளிச்சென்று கண்ணில் வெளிச்சம் படும், எல்லா இடங்களும் பனியால் சூழ்ந்து இருக்கும், அதனால் சூரிய வெளிச்சம் பட்டு எல்லா பக்கத்திலிருந்தும் வெளிச்சம் பிரதிபலிக்கும். இதனால் கண் கூசாமல் இருக்க தான் Sunglass அதிகம் அணிகிறார்கள். அது கண்ணை இந்த அதீத வெளிச்சத்திலிருந்து  பாதுகாக்கும்.



இங்கே மழைக்காலம் என்று தனியாக ஒன்று கிடையாது. பனிக்காலம் இறுதியிலும், இலையுதிர்காலம் இறுதியிலும், வசந்தகாலத்தின் ஆரம்பத்திலும் அவ்வப்போது மழை பெய்யும். சில மாநிலங்களில் இது மாறுபடும். ஆக, மார்ச் மாதம் இறுதி முதல் சற்று மழை பெய்து ஏற்கனவே பெய்த பனியை கறையவைக்க ஆரமிக்கும். இதுதான் வசந்த காலத்தின் ஆரம்பம். இலைகளெல்லாம் அழகாக துளிர் விட ஆரமிக்கும். சில பகுதிகளில் Cherry Blossom என்று சொல்லப்படும் Cherry மரங்கள் நடப்பட்டிருக்கும், சில ஊர்களில் அந்த Cherry Blossomஐ காண ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரம் கூட்டம் களைகட்டும். குறிப்பாக வாஷிங்டனில் இது மிக பிரபலம். 
இது Washingtonஇல் எடுத்தது!
இது வீட்டுக்கு பக்கத்துலயே எடுத்தது!
பூத்துக்கு குலுங்கும் cherry blossom.
ஜப்பானிலிருந்து வரவழைக்கப்பட்டு அமெரிக்காவில் நடப்பு பட்ட இம்மரங்கள் இந்த வசந்த காலத்தின் ஆரமத்தில் பெரும் அழகாக இருக்கும்! மரம் முழுதும் Pink, வெள்ளை சில நேரத்தில் ஊதா நிறத்திலும் மொத்த மரமும் பூத்திருக்கும். இது வெறும் இரண்டு நாட்கள் நாட்டும் தான் இப்படி இருக்கும், இந்த இரண்டு நாட்களில் காண தவறினால் மீண்டும் அடுத்த ஆண்டு மட்டும் தான் இந்த அழகை காண முடியும்.

இந்நாட்டில் பெரும்பாலும் இப்படித்தான். இயற்கையின்மாற்றங்களை கால அட்டவணை போட்டு மக்கள் ரசிப்பார்கள். அரசாங்கமும், தனியார் பொழுதுபோக்கு துறையும் மக்கள் வெவ்வேறு இடங்களுக்கு செல்லவும், வீட்டிலேயே முடங்கி இருக்காமல் வெளியில் சென்று பொழுது போக்க காலத்துக்கு ஏற்ற பொழுதுபோக்கு அம்சங்களை அட்டவணை போட்டு கடைபிடிப்பார்கள்.  ஏப்ரல், மே முதல் குளிர் குறைய ஆரமிக்க... ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் இங்கே கோடை காலம்! இந்நாட்டவர்க்கு கொண்டாட்டம் தான்! 
நிறைந்த ஆடையிலிருந்து குறைந்த ஆடைகளுக்கு மாறும் காலம்; மக்களுக்கு! குறைந்த இலைகளிலிருந்து முழுதும் இலைகளால்  நிறைந்திருக்கும் காலம்; மரங்களுக்கு!
பள்ளிகளுக்கு மூன்று மாதங்கள் விடுமுறை. அலுவலகத்தில் பலர் விடுமுறை எடுத்து வெவ்வேறு இடங்களுக்கு செல்லும் காலம். நீச்சல், Scuba diving, para sailing என்று கோடை காலத்துக்கு ஏற்ற பொழுது போக்கு அம்சங்கள் ஆரமிக்கும்.

குளிர்காலம் முழுக்க கடலில் தண்ணீர் வெகு ஜில்லென்று இருக்கும். யாரும் கடற்கரைக்கு செல்ல மாட்டார்கள்... நீர் நிலைகள் உறைந்து பணியாள் படர்ந்திருக்கும்... ஏரியில் தண்ணீர் உறைந்த பின்னர் நடக்கவேய முடியும்... ஆனால் யாராவது பார்த்தல் அனுமதிக்க மாட்டார்கள், அது மிக ஆபத்தாக முடியும் ஒருவேளை மிகவும் கெட்டியாகவில்லை என்றால்!  அட... கடற்கரையை கோடை காலத்துக்கு தான் திறப்பாங்கன்னா பாத்துகோங்களேன்! அதென்ன கடையா திறக்கறதுக்குன்னு நினைக்கிறீங்களா? ஆமாம்... இங்கே இருக்கு எல்லா கடற்கரையும் நம்மூரில் இருப்பது போல இலவசம் இல்லை... beachஇல் குறிப்பிட்ட தூரம் வெவ்வேறு சிலரால் நிர்வகிக்கப்பட்டு வரும். $10 அலலது $20 கட்டணம் இருக்கும் ஒரு முழு நாளுக்கு. கையில் ஒரு band கட்டிவிடுவார்கள். அவவ்ளவுதான், மற்ற படி கடலில் அவர்கள் போட்ட எல்லை கோடு வரை நீந்தலாம், விளையாடலாம்... பலர் sunbath எடுத்துக்கொண்டிப்பார்கள். மேலும் Lifeguard அந்தந்த பகுதியில் மக்களை கவனித்து கொண்டே இருப்பார்கள் கடலில் தத்தளித்தால் உடனே வந்து காப்பாற்ற ஆட்கள் இருந்து கொண்டே இருஓப்பார்கள். பீச்சில் சற்று குப்பை இருந்தாலும் டபக்கென்று உடனே வந்து கொண்டு சென்று சுத்தம் செய்து விடுவார்கள்.

இப்படியாக மூன்று மாதம் கோடை முடிந்து மெதுவாக மீண்டும் செப்டம்பர் மாதம் முதல் மிதமான குளிரிலிருந்து மீண்டும் இலையுதிர் காலம் ஆரமிக்கும்..... இந்த நான்கு காலங்களையும் காட்டும் படங்களாக, ஒரே இடத்தை நான்கு காலங்களிலும் நான் எடுத்த படத்தை ஒரு காணொளியாக இங்கே உங்களுக்காக இனப்பிப்பு கொடுத்துள்ளேன். 


Spring -> Summer -> Fall -> Autumn -> Winter இதுதான் பருவகால சுழற்சி. இதில் முக்கியமான விஷயம் என்ன என்றால்... ஆறு மாதங்கள் விரைவில் இருட்டிவிடும்.... ஆறு மாதங்கள் மிக தாமதமாக இருட்டும்.... நான் பள்ளியில் படித்த in summer days are longer, nights are shorter; in winter days are shorter, nights are longer என்பதற்கு அர்த்தம் இங்கு வந்த பின்னர் தான் புரிந்தது! அதாவது நான்காம் வகுப்பில் படித்த பாடத்தின் practical அர்த்தம் இருபது ஆண்டு கழித்து தான் காண நேர்ந்தது! அக்டோபர் முதல் மாலை நான்கு மணிக்கே "கும்மிருட்டாக" இருக்கும். நான்கு மணிக்கெல்லாம் சூரிய அஸ்தமனம் ஆகிவிடும், காலையில் ஏழு மணிக்கு மேல் தான் சூரிய உதயம் இருக்கும், வெளிச்சம் வரும். மார்ச்சு மாதம் கழித்து மெதுவாக சூரிய அஸ்தமனம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு நிமிடம் தாமதம் ஆகி, ஆகஸ்ட் இறுதி வரை இரவு ஒன்பது மணிக்கு தான் சூரிய அஸ்தமனம் ஆகும், இரவி பத்து மணி வரை நல்ல வெளிச்சம் இருக்கும்! இந்த சமயத்தில் தான் Day Light Saving என்று ஒன்று உண்டு இதை சுருக்கி DST என்பார்கள். நவம்பர் மாதம் முதல்  வாரத்தில் நாட்டில் எல்லோருமே கடிகாரத்தை ஒரு மணி நேரம் பின் திருப்பி வைப்பார்கள்... மார்ச் மாதம் இரண்டாம் வாரம் கடிகாரத்தை ஒரு மணி நேரம் அதிகப் படுத்தி வைப்பார்கள்.

இப்படியாக எந்த காலமாக இருந்தாலும் வெளியே சென்று இயற்கையுடன் இணைந்திருக்க, இயற்கையை ரசிக்க என்று ஒரு விஷயம் இருக்கும். அதை தவற விட்டால், மீண்டும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்! ஹ்ம்ம்.. இப்போதிருக்கும் பருவ மாற்றத்தை பார்த்தால், அடுத்த வருடம் என்பது ஒரு மாயை... காற்றுள்ளபோதே தூற்றிக் கொண்டால் தான் இயற்கையை ரசிக்க முடியும்!

*** அடுத்த அத்தியாயம் விரைவில்.... ***

இந்த தொடர் கட்டுரையை பற்றிய உங்கள் கருத்துக்களை மறவாமல் கீழே பதிவு செய்யுங்கள். எப்படி கருத்து தெரிவிப்பது என்பது சிரமமாக இருந்தால் bhargav.hsr@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் கருத்தை அனுப்பவும். நன்றி!
Blogger Widget

வெள்ளி, 3 நவம்பர், 2017

இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 4 | ரோடு போடுறாங்க ரோடு


சரி வணக்கம் சொல்லும் முன் இந்த வாடகை நம்ம ஊர் விலையில் எவ்வளவு என்று பார்ப்போமா... நம் மக்கள் தங்கியிருக்கும் வீட்டு வாடகை குறைந்த பட்சம் மாதம் நம்மூர் விலைமதிப்பில் 48,750 ரூபாய் ($750) முதல் 1,23,500 ரூபாய் ($1900) வரை. அம்மாடியோவ்!!!

நிச்சயம் பல எழுத்துப் பிழைகள் இருக்கும், அவ்வப்போது அதை சரிசெய்கிறேன்.
அத்தியாயம்-4

வீட சுத்தி பாத்தாச்சு, சரி வெளிய போயிட்டு வரலாம் வாங்க...  மாப்ள, அந்த ரோட அப்டியே உத்துப் பாத்தோம்னா, மூஞ்சி தெரியும்டா மூஞ்சி... என்று வெற்றிக் கொடி கட்டு படத்தில் வரும் வடிவேலு நகைச்சுவை போல தான் பெரும்பாலான ரோடு இருக்கும், என்ன... மூஞ்சி எல்லாம் தெரியாது... ஆனா கண்டிப்பா அப்டியே ரோட்டுல உக்காந்து அரட்டை அடிக்கலாம் போல இருக்கும். பல தடவை நம் நாடு இப்படி இல்லையே என்று பொறாமை கொண்டுள்ளேன், சில நேரம் எப்படி தான் டா மக்களுக்காக இவ்வளவு யோசிக்கிறீங்க என்று கோவம் கூட கொண்டுளேன், இதுக்கு ஏன் கோவம்? எந்த இடத்துல கோவம் என்று சற்று நேரத்தில் பாப்போம்.

அமெரிக்காவில் ஐம்பது மாநிலங்கள் உள்ளன. நாற்பத்தி எட்டு மாநிலங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்ச்சியாக மற்றும் அலாஸ்கா, ஹவாய் தீவு இது இரண்டு மாநிலங்கள் அமெரிக்காவிலிருந்து தொலைவிலும் உண்டு. நமக்கெல்லாம் நன்றாக தெரிந்த Washington D.C மாநிலம் அல்ல, அதை Federal District என்பார்கள். இது தவிர அமெரிக்காவின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் இந்தியாவுக்கு எப்படி அந்தமான், நிக்கோபார், lakshadweep தீவுகளோ, அது போல பல தீவுகள் அமெரிக்காவின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. என்ன, நம் தீவுகள் போல பக்கத்திலேயே இல்லாமல் பல ஆயிரம் மயில்கள் கடந்தெல்லாம் கூட அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் தீவுகள் உள்ளன. சரி, இதெல்லாம் தான் Wikipedia பார்த்தாலே தெரிந்துவிடுமே, நம்ம விஷயத்துக்கு வருவோம்.

இப்படியாக ரொம்பவே பறந்து விரிந்து கிடக்கும் தேசமான அமெரிக்காவின் சாலைகள் எப்படி இருக்கும்? முதலில் வீடு வாசலிலிருந்து ஆரமிப்போம். நான் தங்கியிருக்கும் குடியிருப்பு பகுதியில் நான்கு மாதத்திற்கு முன் ரோடு போட்டார்கள். இதற்கு முன்னிருந்த ரோடு நான் இங்கு வருவதற்கு முன்னரே எப்போதோ போட்ட ரோடு. குறை சொல்லும்படி மோசமாகவெல்லாம் இல்லை. நன்றாக தான் இருந்தது. ரோடு பழையது ஆகியிருந்தமையாலும், ஆங்காங்கே சற்று விரிசல் விட்டிருந்தமையாலும் புதிதாக ரோடு போட்டார்கள். இது, ஒரு private community management போட்ட ரோடு.

இதற்கு முன் வெளியே உழவர் சந்தைக்கு செல்லும் வழியில் பொது சாலை போட்டுக் கொண்டிருந்தார்கள். அப்படி ஓர் ஆச்சர்யமாக இருந்தது. என்னவென்றால், நம்மூரில்/நம்நாட்டில் தெருவில் எப்படி ரோடு போடுவார்கள்? ஏற்கனவே இருக்கும் குண்டும் குழியுமான ரோட்டை துடைப்பத்தால் பெருக்கி, அதன் மேல் ஜல்லி கற்களை கொட்டி, Road rollerஐ விட்டு ஒரு முறை ஏற்றி, அதன் மேல் தாரை ஊற்றி போடி ஜல்லிகளை போட்டு மீண்டும் ரோடு ரோலரை ஓட்டி ரோடு போட்டு, இரண்டு ஆதி இருந்த ரோட்டை எப்பெப்பலாம் பணம் கொள்ளை அடிக்கவேண்டுமோ அப்போவெல்லாம் இதே போல ரோடு போட்டு அடிக்கு மேல் அடி ரோடு போட்டு வீடுகளை எல்லாம் குழிக்குள் காட்டியது போல ஆகி விடுவார்கள் அல்லவே? அதனால் தானே சிறிது மழை வந்தாலும் நம் வீட்டினுள்ளே எல்லாம் தண்ணீர் வந்துவிடுகிறது.

நாம் வீடு கட்டும்போது ரோட்டை விட இரண்டடி உயரத்தில் கட்டினால், இரண்டே வருடத்தில் ரோடு வீட்டுக்கு சமமாக வந்துவிடும். அரசு எவனோ ஒருத்தனோட மச்சானுக்கோ, மாமனுக்கோ contract கொடுத்து, அவன் ஒரு பத்து பேரை எவ்வளவு அடிமட்டமா சம்பளம் குடுக்க முடியுமோ அவ்வளவு அடிமட்டமாக சம்பளம் கொடுத்து அழைத்து வந்து எவ்வளவு நீளம், அகலமான தெருவாக சாலையாக இருந்தாலும் பொசுக்கென்று மூன்று அல்லது நான்கே நாட்களில் ரோடு போட்டு முடித்துவிடுவார்கள்.

என்னமோ ஒழுங்கா ரோடு போட்டு கிழுச்சுடறா மாதிரி மூணு மாசம் தெருவுல ஜல்லி, மண்ணு எல்லாம் கொட்டி வெச்சு ஓரத்துல ஒரு ரோடு ரோலரையும் நிக்க வெச்சுட்டு போயிடுவானுங்க, ஏன்னா மூணு மாசமா ரோடு போடா மாதிரி ரோடு ரோலருக்கு தினா வாடகை, மூணு மாசமா பணியாட்களை தினக்கூலி மற்றும் பேட்டா என்று எல்லாவற்றையும் கணக்கு காண்பித்து கடைசி நான்கு நாட்கள் மட்டும் அரக்க பறக்க ரோடு போட்டு சென்று விடுவார்கள். இவன் (ரோடு போட்டவன்) போன பின் அப்போதுதான் நாம் ஒரு பெரு மூச்சு விட்டு, இது எத்தனை நாளைக்கோ என்று நினைத்து நன்றாக இருக்கும் ரோட்டைப் பார்த்து ஒரு சின்ன சிரிப்பு சிரிக்க ஈஈ என்று ஆரமிப்போம், அதற்குள்ளேயே இத்தனை நாட்கள் நன்றாக தூங்கி விட்டு என்னமோ குடி முழுகி போவதுபோல BSNL காரன் வருவான். என்னமோ அவன் சோற்றில் முடி விழுந்ததை எடுத்து போடுவது போல, அப்போதுதான் புதிதாக போட்ட ரோட்டை நம் கண்முண்ணேயே நோண்டி போட்டு என்னமோஅலுவலகத்திலேயே மறந்து வைத்தவன் போல அப்படியே மூடாமல் கூட போய்விடுவான்! 

அப்படி ஒருவேளை யார் செய்த புண்ணியதாலோ BSNLகாரன் வரவில்லை என்றால், யாரோ செய்த புண்ணியத்துக்காக மழை வரும். பாவம் அது என்னமோ நம் நன்மைக்காக தான் வரும். ஆனால் இந்த அரைகுறைகள் போட்ட அரைகுறை ரோடு தான் லட்டு கீழே விழுந்து பூந்தி ஆவதை போல, மழை துளிகள் விழுந்த உடனேயே ஜல்லி ஜல்லியாக ரோடு பிரிந்து வந்துவிடும்.

இதை எல்லாம் நினைத்தால் கோவம் வராதா என்ன? இப்படித்தான் அன்று உழவர் சந்தை சென்ற போது இந்நாட்டவர் இங்கு ரோடுவதை பார்த்த மறுநொடியில் எனக்கு கோபம் வந்தது. சேரி அப்படி என்ன தான் பண்ணாங்க சொல்லித் தொலையேன் என்று தானே கேட்கிறீர்கள். இதோ...

ஒரு சாதாரண தெரு, அந்த தெருவில் ரோடு போட, ஏற்கனவே இருக்கும் ரோட்டை "Cakeஐ வெட்டுவதுபோல" அப்படியே வறண்டி, நோண்டி ஏற்கனவே இருந்த தார் எதுவும் இருந்த சுவடு தெரியாமல் எடுத்துவிட்டு. தெருவை சுத்தம் செய்யும் வண்டி மூலம் நோண்டிய இடத்தை முழுவதும் சுத்தம் செய்துவிட்டு பின்னர் அதன் மேல் ரோடு போடுவார்கள், இது போட்டு முடித்தபின்னர்... ரோட்டின் இடது பக்கமும் வலதுபக்கமும் (Dividerருக்கு இடது, வலது) சிறு பிசுறு தெரியாமல் ஒரே சமமாக இருக்கும். அதன் பின்னர் அடுத்த பக்கத்தை நொண்டியெடுத்து ரோடு போடுவார்கள். 

என் மனைவியுடன் நான். படம் எடுத்தவர் என் நண்பர் பிரவீன் கண்ணன்.
சாலையின்இடது பக்கம் ரோடு போட்டுக் கொண்டிருக்க, வலது பக்கம் வண்டிகள் எல்லாம் சென்றுக் கொண்டுதான் இருக்கும். இதை ரோடு போடுபவருள் ஒருவர் கையில் STOP என்ற signboardஐ வைத்துக்கொண்டு எதிர் எதிர் வரும் வண்டிகளை நிறுத்தி நிறுத்தி இருபுறமிருக்கும் வண்டியையும் போக்குவரத்து நெரிசல் ஆகாமல் அனுப்பிக்கொண்டிருப்பார். அவர் காண்பிக்கும் boardஐ மதித்து மக்களும் வண்டியை நிறுத்துவார்கள்.

மேலே சொன்னது வெறும் சாதாரண தெருவில் இருக்கும் ரோடு போடுவது பற்றி. இதுவே நெடுஞ்சாலை என்றால் நினைத்துப் பாருங்கள். விஷயம் என்னவென்றால் 

1. ரோடு போடும் பொது மக்களுக்கு இடையூறு இருக்கக் கூடாது.
2. ரோடு போடும் பணியாளரின் பாதுகாப்பு மிக முக்கியம்.
3. நம்மை அவர்கள் மதிப்பார்கள், நாம் அவர்களை மதிக்க வேண்டும்.

அவ்வளவுதான். நெடுஞ்சாலையில் எங்கேனும் சாலை பனி நடக்கிறது என்றால், கிட்டத்தட்ட ஒரு ஐந்து, சில இடங்களில் பத்து மைல்கள் முன்னிருந்தே Digital sign boardஇல் 
Road Work Ahead... 
Road Work in 3 miles... 
Road work in 1 mile
End of Road Work என்று தேவையான அளவுக்கு எச்சரிக்கைசெய்து வைப்பார்கள். 

நம் நாட்டில் பள்ளி முன்பு, அரசு மருத்துவமனை முன்பு Go Slow, No Horn என்றெல்லாம் signboard  இருக்கும், சிலர் அதை மதித்தாலும் பெரும்பாலானோர் அதை மதிக்க மாட்டார்கள், மதிக்கா விட்டாலும் எந்த தண்டனையும் இல்லை, அபராதமும் இல்லை. மேலும் வேகத்தடை ஆங்காங்கே இருக்கும், ஆட்டோ ஓட்டுநர் ஆகட்டும், taxi ஓட்டுபவராகட்டும் அந்த வேகத்தடையின் ஒரு ஓரத்துக்கு சென்று வண்டியின் ஒரு சக்கரத்தை வேகத் தடை இல்லாத பகுதியில் கொண்டு சென்று ஏதோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் (ஹ்ம்ம்... எனக்கும் அந்த வடிவேலு, சரத்குமார் படம் நகைச்சுவை தான் நினைவுக்கு வந்தது!) வாங்குவதுபோல வண்டியை ஓடுவார்கள். முக்கியமான விஷயம் என்னவென்றால் வேகத்துக்கு ஒரு அளவு என்ன என்று யாருக்குமே தெரியாது. நிச்சயமாக போக்குவரத்து அலுவலகத்தில் வேலை செய்பவருக்கு கூட எங்கே எந்த அளவிலான வேகத்தில் செல்ல வேண்டும் என்ற அளவு தெரியாது.

ஆனால், இங்கு... ஒவ்வொரு தெருவிலும் 35 மைல் வேகத்தில் தான் வண்டி செல்ல வேண்டும், பள்ளி இருக்கும் பகுதியில் 25 மைல் வேகத்தில் தான் செல்ல வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் வேகத்துக்கான Signboard இருக்கும், அதை கண்டிப்பாக பார்த்து அதற்கு ஏற்ற வேகத்தில் தான் வண்டி ஓட்ட வேண்டும். அதெப்படி வண்டி ஓட்டும் போது இதெல்லாம் பார்க்க முடியுமா என்றால், ஆம் நிச்சயம் முடியும். ரொம்ப சோம்பலாக இருந்து வேகத்தடையை பார்க்காமல் சற்று தான் வேகமாக போகலாமே யார் பார்க்க போகிறார்கள் என்று நினைத்து போயிதான் பாருங்களேன். பதுங்கியிருக்கும் புலி பாய்வதுபோல சட்டென்று பின்னே Police வண்டி வந்து நம்மை ஓரம் கட்ட சொல்லி, ஒரு அபராதம் மாற்றும் இரண்டு pointகள் கொடுத்து அடுத்த வண்டியை பிடிக்க சென்று விடுவார்கள். (அதென்ன points? அதை ஓட்டுநர் உரிமம் பற்றிய அத்தியாயத்தில் பார்ப்போம்.)

சென்ற அத்தியாயம் ஆரம்பத்தில் பருவமாற்றத்தின் இலைகள் நிறம் மாறுவதை பார்க்க சென்றேன் என்று சொன்னேன் தானே, அங்கே எடுத்ததில் ஒரு படம்.
அட என்னப்பா நீ இப்படி சொல்லிட்ட, அமெரிக்கால தான அதிவேக race car எல்லாம் இருக்கு என்று நீங்கள் கேட்கலாம், எந்த வண்டியாக இருந்தாலும் ஆங்காங்கே என்ன வேக அளவு கொடுக்கப் பட்டுள்ளதோ அதில் தான் செல்ல வேண்டும். நமூரில் Highway என்று சொல்வதுபோல இங்கு Freeway என்பார்கள். அதில் மூன்று Laneகள் இருக்கும். இடது Lane passing lane என்று பெயர். அதாவது ஒரு வண்டியை overtake செய்ய வேண்டும் என்றால் மட்டும் அந்த லேனில் செல்ல வேண்டும், overtake செய்துவிட்டு மீண்டும் நடு லேனுக்கே வந்து விடவேண்டும். கடைசி lane மெது lane கொஞ்சம் பொறுமையாக ஓடிக்கொள்ளலாம், ஆனால் Minimum speed கடைபிடிக்க வேண்டும். சில மாநிலங்களில் குறைந்தபட்சம் 40MPH (Mile per hour) வேகத்தில் தான் செல்ல வேண்டும்.

படம்: Dummy's Photography (அதுவும் நான்தான்)
இதில் முக்கியமான விஷயம் என்ன என்றால் Shoulder என்ற ஒன்று. அதாவது மேல சொன்ன மூன்று laneகள் போக முக்கிய நெடுஞ்சாலைகளில் பெரும்பாலும் சாலையின் இடது பக்கத்தில் அந்த மெது லேனுக்கு அடுத்து ஒரு lane இருக்கும், அதன் பெயர் Shoulder, இதில் வண்டிகள் ஓட்டி செல்லக் கூடாது. அவசரத்திற்கு நிறுத்துவதற்கு மட்டும் தான் இந்த lane. ஆஹாம்... அந்த அவசரமில்லை... இது முக்கியமாகவே ஏதாவது அவசரம், அவசியம் என்றால் இங்கு நிறுத்திக்கொள்ளலாம். அந்த அவசரம் பற்றி அடுத்த வரம் எழுதுகிறேன். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் சாலையின் இரண்டு பக்கமும் ரோட்டை சிறிது சிறிதாக செதுக்கியிருப்பார்கள். அதாவது சாலையில் இருக்கும் கடைசி லேனிலிருந்து (கோட்டிலிருந்து) கவனம் இல்லாமல் வெளியே செல்கிறோம் என்றால், அந்த செதுக்கிய இடத்தின் மேல் வண்டி செல்லும்போது டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று வண்டி அதிரும் (vaibrate ஆகும்). இது ஒரு அற்புதமான விஷயம், இரவில் ஒரு வேலை தூங்கி விட்டாலோ, கண் அசந்து விட்டாலோ சாலை ஓரத்தில் இருக்கும் தடுப்பில் மோதியோ, சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் வாரியில் மோதியோ விபத்து ஆகாமலிருக்க இது முக்கிய உதவியாக இருக்கும். சட்டென்று அந்த நொடியில் எவ்வளவு தூக்கத்தில் இருந்தாலும் அதிர்ந்து முழித்து விடுவோம்.



  
நினைவிருக்கிறதா? இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் ஏதோ பொறாமை வரும், கோவம் வரும் என்றெல்லாம் சொன்னேனே? அதில் பாதி எந்த இடத்தி என்று உங்களுக்கே தெரிந்திருக்கும். மீதி என்ன என்றால்... இப்படி பறந்து கிடைக்கும் அமெரிக்காவில் காட்டுக்கு நடுவே சென்றாலும் சாலை அற்புதமாக போடப் பட்டிருக்கும், ஒருசில இடம் கன்னாபின்னா மேடு, ஒரு வீடும் கண்ணுக்கு தென்படவில்லையே, இந்த பக்கம் ஒன்னும் இல்லையே, இது அடர்ந்த காடாச்சே, என்று என்னென்ன தோணுமோ அந்தந்த இடத்துக்கு சென்றாலும் அங்கெல்லாம் "தரமான ரோடு" போடப் பட்டிருக்கும். இந்த மூன்று ஆண்டுகளில் நான் குறைந்தது இருபதாயிரம் மைல்கள் பயணித்திருப்பேன், முகம் சுழிக்கும் அளவு எங்கும் சாலையை கண்டதில்லை. 

பனிக்காலத்தில் சாலையில்.. சரி அடுத்த வார அத்தியாயத்தின் முன்னே சாலையைப் பற்றிய இந்த கடைசி விஷயத்தையும் சேர்த்துக்கொள்கிறேன்.

*** ஐந்தாம் அத்தியாயம் அடுத்த வாரம் வெள்ளி வெளிவரும் *** 

நான் எடுத்த மற்ற படங்களை பார்க்க இங்கே இதை கிளிக் செய்யவும்     https://www.facebook.com/dummysphotography/
Blogger Widget

திங்கள், 23 அக்டோபர், 2017

இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 3.0 | வாடகை எவ்வளவு?

பரீட்சை நேரத்தின் முடிவில் நமக்கு தெரிந்த கேள்வியை கவனித்து, அரக்க பறக்க பதில் எழுதுவது போல, சென்ற வாரம் சட்டென்று கட்டுரையை முடிக்க வேண்டியதாகிவிட்டது. இலையுதிர் காலமென்பதால் இலைகளின் நிறமாற்றத்தை கண்டு ரசிக்க என் மனைவியுடன் வெளியூர் செல்ல வேண்டியிருந்தமையால் சட்டென்று முடித்துவிட்டு பட்டென்று கிளம்பிவிட்டேன்!

சென்ற வார தொடர்ச்சி...

நம்மூரில் கொடுப்பதுபோல நூறு யூனிட்டுக்கு கரண்ட் இலவசமெல்லாம் கிடையாது. இது இவ்வளவு பெரிய தலைப்பாக போகும் என்று நினைக்கவில்லை, வீட்டிற்கு சம்பந்தமான மற்ற பல விஷயங்களை தொடர்கிறேன்...


எண்ணெய் மற்றும் மின்சார தீப ஒளியில் எங்கள் வீடு பால்கனி. படம்: Dummy's Photography

அத்தியாயம் 3.0

ஒவ்வொரு வீட்டிலும் heater, AC இருக்கும் என்று உங்களுக்கு இப்போது தெரியும் தானே, இதை கேளுங்கள்... ஒவ்வொரு வீட்டிலும் தண்ணீர் குழாயில்; சமயலறை மற்றும் குளியலறையில் இருக்கும் குழாய்களில் குளிர் தண்ணீர் மற்றும் சுடு தண்ணீர் இரண்டுமே வரும்! நம்மூர் போல தனி குழாய்கள் அன்றி ஒரே குழாயில், குழாயின் தலையை வலது பக்கம் சாய்த்தால் குளிர் நீரும், இடது பக்கம் சாய்த்தால் வெந்நீரும் வரும்! இதற்கு நாம் ஏதும் switch எல்லாம் போடவேண்டியது இல்லை, 24/7, ஆண்டு முழுக்க  எப்போதுமே இப்படி தண்ணீர் வரும்.

வீடுகளில் தண்ணீருக்கு மோட்டார் போடுவது, மோட்டார் ஓடும் சத்தம் இது எல்லாம் மூன்று ஆண்டுகளாக கேட்டதே இல்லை இங்கே. மொட்டை மாடியில் கருப்பு மற்றும் நீல நிற Synthetic தண்ணீர் தொட்டி, sump எல்லாம் கிடையாது. "என்னது அந்த வீட்டுல 300 அடியில தண்ணி வந்துடுச்சா போடு 350 அடிக்கு borewell என்று போட்டி போட்டுக் கொண்டு வீட்டுக்கு தனியாக borewell எல்லாம் போடமுடியாது. borewell லாரியெல்லாம் நம்ம ஊரு மாதிரி இங்கே கிடையவும் கிடையாது, ஒவ்வொரு வீடு கட்டும்போதே போடப்பட்ட குழாய்களுக்கு ஒரு மைய்யப் பகுதியிலிருந்து தண்ணீர் வரும். அதற்கு மாதாந்திரம் current bill கட்டுவதுபோல நம் உபயோகத்துக்கு ஏற்றார் போல கட்டணம் செலுத்தவேண்டும்.  இத்தனை  Gallonக்கு இவ்வளவு டாலர் என்ற கணக்கு. நான் apartment வீட்டில் குடியிருப்பதால் அது எவ்வளவு வரும் என்று எனக்கு தெரியாது. குறைந்த பட்சம் எவ்வளவு தான் தண்ணீர் கட்டணம் வரும் என்பதை Atlantaவில் வசிக்கும் என் நண்பன் இஜாஸ் அகமதிடம் தான் கேட்கவேண்டும்.

அதே போல, குளியலறையில் நம்மூரில் இருப்பது போல வாளி, Mug எல்லாம் கிடையாது, சோப்பு விளம்பரத்தில் வரும் bathtub தான். அந்த bathtubஇல் நின்றுகொண்டே குளிக்கவேண்டும். இதற்கு தடுப்பாக ஒரு மெல்லிய screen துணி மற்றும் அடர்த்தியான coverஇல் வரும், இது மலிவு விலையிலிருந்து விலையுயர்ந்த ராகம் வரை கிடைக்கும். தனி வீடுகள் மற்றும் சில விலையுர்ந்த அபார்ட்மென்ட்டுகளில் கண்ணாடியாலான தடுப்பு கதவு இருக்கும். இது இந்த bathtubபுக்கு மட்டும். குளியலறையில் தரையை நம்மூரில் அலம்புவதுபோல தண்ணீர் ஊற்றி கழுவிவிட முடியாது, தண்ணீர் வெளியே செல்ல துவாரமெல்லாம் கிடையாது. மாப்பு வைத்து துடைத்துக்கொள்ள வேண்டியதுதான். (இதை முயாதலில் சொல்லமறந்து, அதை நினைவு கூர்ந்த நண்பர் கலிபோர்னியை விசுAwesome அவர்களுக்கு நன்றிகள் தெரிவித்துக்கொள்கிறேன்!)

அதே போல அதுக்கு paper தான். tissue paper இங்கே மிக தரமாக கிடைக்கும். பெரிய பெரிய bundleஆக Costco, Walmart போன்ற கடைகளில் கிடைக்கும். நம் மக்கள் வீட்டில் கண்டிப்பாக Mug இருக்கும்! தண்ணீர் வராத நாட்கள் இருந்ததில்லை. ஒரே ஒரு நாள் தெருவில் ஏதோ pipe உடைந்ததன் காரணமாக ஒரு இரண்டு மணிநேரம் தண்ணீர் வரவில்லை, அவ்வளவுதான். 


வீட்டில் எக்கச்சக்க Plug point இருக்கும். தரையை ஒட்டி, சுவரின் நடுவே என்று நமக்கு எப்படி எல்லாம் தேவை படுமோ, அங்கெல்லாம் plug point வைத்திருப்பார்கள். இது என்ன பெரிய ஆச்சர்யம் என்று நீங்கள் கேட்கலாம், இல்லையா பின்ன? நாம் சொந்த வீடு நம் கைக்காசு போட்டுக் கட்டும்போதே இங்கெங்கெலாம் plug point வேண்டும் என்று சொன்னால், electrician என்னமோ அவர் கைக்காசில் கட்ட சொன்னதுபோல ஆயிரம் சாக்கு போக்கு சொல்வார். அப்படியெல்லாம் இல்லாமல் குடியிருப்பு வீட்டுக்கு எத்தனையோ ஆண்டுக்கு முன்னர் கட்டப்பட்ட வீட்டிலேயே பின்னாட்களை கணக்கிட்டு கட்டியிருக்கும் போக்கு நிச்சயம் பிரமிக்க வைக்கும். அட, பால்கனியில் கூட plug point வெச்சிருக்காங்கன்னா பாத்துகோங்களேன்!



அதேபோல இங்கு நம்மூர் plug வேலை செய்யாது, வேலை செய்யாது என்பதை விட, நம் நாட்டு plug உருண்டையாக இருக்கும், இங்கு சப்பையாக இருக்கும்! ஒவ்வொரு plugகுக்கும் switch எல்லாம் கிடையாது, அப்படியே உபயோகப் படுத்த வேண்டியதுதான். குழந்தை இருக்கும் வீடு என்றாலும் பிஞ்சு விறல் நுழைந்துவிடுமோ என்ற அச்சம் தேவை இருக்காது, நகம் இருக்கும் மெல்லிய அளவிலேயே plug point இருக்கும். அட... இது நம் நாட்டில் இருந்திருந்தால் இதில் விரலை விட்டால் என்ன ஆகும் என்று நான் மூணாவது படிக்கும்போது plug pointஇல் விரலை விட்டு கிறுகிறுத்து போன அனுபவம் இல்லாமல் போயிருக்கும்! நம் நாட்டிலிருந்து இங்கே கொண்டு வரும் மொபைல் charger உபயோகிக்கவேண்டும் என்றால் அதற்கு international adapter தேவைப்படும். சரி, இவ்வளவு சொல்லியாச்சு இன்னும் வாடகை எவ்வளவுன்னு சொல்லலையேப்பா என்றுதானே நினைக்கிறீர்கள், அடுத்து அது தான்...

வீட்டு வாடகை பல விதமாக மாறுபடும், தனி வீடு என்றால் மாநிலங்களை பொறுத்து விலை அள்ளும்!!! அமெரிக்காவின்மையத்தில் இருக்கும் texas, atlanta, richmond, ohio போன்ற இடங்களில் தனி வீடே எழுநூறு முதல் ஆயிரம் டாலருக்குள் கிடைத்துவிடும். இதை townhouse என்பார்கள். மேலும் இந்த ஊர்களில் அபார்ட்மெண்ட் வீடுகளும் எழுநூற்று ஐம்பது டாலர்களிலெல்லாம் கிடைத்துவிடும். ஆனால் நியூ ஜெர்சி, கலிபோர்னியா போன்ற கிழக்கு மற்றும் மேற்கு துருவங்களில் ஆரம்ப வாடகையே  ஆயிரத்துநூறு டாலர். இதெல்லாம் ஒரு படுக்கையறை  கொண்ட மற்றும் குறைந்த பட்ச வீட்டு வாடகை. இதுவே 2BHK வீடு என்றால் ஆயிரத்து ஐநூறு டாலர் முதல் ஆரம்பமாகும்.வீட்டு வாடகை Online மூலமாக, அல்லது bank check மூலமாக தான் செலுத்த வேண்டியிருக்கும். நம்ம ஊர் போல house owner வீட்டுக்கு மாத ஆரம்பத்தில் சென்று குடுக்க எல்லாம் தேவை இல்லை. 

apartment வீடு என்றால் மட்டும் தான் அருகருகே வீடு இருக்கும், தனி வீடு சில மாநிலங்களில் பக்கம் பக்கமாக இருக்கும், இதுவே சொந்த வீடு என்றால் "சில மாநிலங்களில், பெரும்பாலான இடங்களில்" நாம் கத்தினாலும், கூப்பாடு போட்டாலும் கேட்க ஆளில்லாத தூரத்தில் தான் அடுத்த வீடு இருக்கும். அப்படியே ஆங்கில சினிமாவில் நாம் பார்ப்பதுபோல தான் மரங்கள், காடுகளுக்கு நடுவே பெரிய பெரிய வீடுகள் இருக்கும். எப்படித்தான் இங்கே இவ்வளவு தனியாக இருக்கிறார்கள் என்று தான் ஒவ்வொரு முறையும் நமக்கு தோணும் அந்த வீடுகளை பார்க்கும்போது.

சரி வணக்கம் சொல்லும் முன் இந்த வாடகை நம்ம ஊர் விலையில் எவ்வளவு என்று பார்ப்போமா... நம் மக்கள் தங்கியிருக்கும் வீட்டு வாடகை குறைந்த பட்சம் மாதம் நம்மூர் விலைமதிப்பில் 48,750 ரூபாய் ($750) முதல் 1,23,500 ரூபாய் ($1900) வரை. அம்மாடியோவ்!!!


அடுத்த அத்தியாயம் இந்தவாரம் வெள்ளிக்கிழமை வெளிவரும்... (கண்டிப்பா வருங்க!)
Blogger Widget

வெள்ளி, 6 அக்டோபர், 2017

இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 3 | வீடு வாடகைக்கு

இரண்டாம் அத்தியாயத்தின் இறுதியில்....

இப்படியாக வெளியில் மட்டும் அல்ல, வீட்டினுள்ளும் சுத்தமாக வைத்திருக்கிறோமா என்று பார்க்க apartment வீடுகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை state inspection வருவார்கள். முழு வீடும் சுத்தமாக இருக்கிறதா என்று பார்ப்பார்கள். inspection வருவதற்கு ஒருவாரம் முன்னர் ஒவ்வொரு வீட்டுக்கும் அறிவிப்பு வரும். வீட்டில் நாம் இல்லை என்றாலும் அவர்களிடத்தில் இருக்கும் சாவியை வைத்துக்கொண்டு inspection அன்று வருவார்கள், அரசாங்க அலுவலருடன் நாம் தங்கியிருக்கும் apartment மேற்பார்வையாளர் உடனிருப்பார், ஏதேனும் சுத்தம் இல்லை என்றால் $450 டாலர் வரை அபராதம் இருக்கும், அவர்கள் தரப்பிலிருந்து ஏதேனும் மாற்ற வேண்டும் என்று நாம் கூறினால் அவர்களே மாற்றிக் கொடுப்பார். சில இடங்களில் இது மாறுபடும்.


மூன்றாம் அத்தியாயம்:
நான் குடியிருக்கும் communityயின் ஒரு பகுதி.
பல ஆண்டுகளாக இங்கேயே வசித்துவரும் நம் நாட்டவர் தவிர, சமீபத்தில் நம் நாட்டிலிருந்து இங்கு வந்த மக்கள் apartment வீடுகளில் தான் வாசிப்பார். சில மாநிலங்களில் தனி வீடு குறைந்த வாடகையில் கிடைக்கும். சரி, வாடகை எவ்வளவு என்று தானே கேட்கிறீர்கள்? இதோ சில வரிகளில் அதற்கு பதிலளிக்கிறேன்.

முதலில் வீடு எப்படி வாடகைக்கு கிடைக்கும் என்று பார்ப்போம். நமக்கு தெரிந்தவர்கள் பெரும்பாலும் மென்பொருள் துறையில் இருப்பதால் அதையே உதாரணமாக வைத்து சொல்கிறேன். அதாவது, இந்தியாவிலிருந்து நம்மை ஒரு company இங்கே வேலை செய்ய அனுப்புகிறார்கள் என்றால், முதல் இரண்டு வாரங்களுக்கு இங்கே தங்க ஒரு hotel room கொடுப்பார்கள். அந்த இரண்டு வாரங்களில் நாம் வீடு தேடிக் கொள்ள வேண்டும். விடுப்பெல்லாம் கிடைக்காது, காலையில் வேலை, மாலையில் வீடு தேடும் படலம். வேளைக்கு நடுவில், அதுதான் computer, internet இருக்கிறதே! சில இணைய தளங்களில் roommate தேவை என்று நம் மக்கள் விளம்பரம் செய்திருப்பார், bachelor என்றால் ஒரு call செய்து வீடு பிடித்திருந்தால் எப்போது வேண்டுமானாலும் அங்கு போயி தாங்கிக்கொள்ளலாம். 

ஆனால், குடும்பஸ்தர்கள் என்றால், தனி வீட்டு எடுக்க சில கட்டங்களை தாண்ட வேண்டும். முதலில் வீடு கிடைக்கவேண்டும். வீடு வாடகைக்கு என்றெல்லாம் இங்கே board இருக்காது. அதே போல நம் நாட்டில் இருப்பது போல தனி நபர் வீடு வாடகைக்கு விடுவது என்பதெல்லாம் இங்கே பார்க்க முடியாது. Community apartmentகள் தான் பெரும்பாலான இந்தியர்கள் வசிக்கும் இடம். ஒவ்வொரு ஊரிலும் சில பல communityகள் இருக்கும். அந்த மொத்த communityகும் Leasing Office ஒன்றிருக்கும். நமக்கு வீடு வேண்டும் என்றால் அந்த Leasing Officeசுக்கு சென்று விசாரிக்க வேண்டும்.

அந்த Leasing Officeசுக்கு உட்பட்ட community apartmentகளில் எங்கெல்லாம் வீடு காலி இருக்கிறது என்று தெரிவிப்பர். ஒருவேளை வீடு புடித்துவிட்டது என்றால் தடால் என்று வீடு கிடைத்துவிடாது. நம்மூரில் PAN கார்டு இருப்பது போல இங்கே SSN என்று உண்டு. Social Security Number என்று பெயர். ராகு, கேது எந்த கட்டத்தில் இருக்கிறார்கள் என்று மட்டும் தான் சொல்லாது. மற்ற படி நம் தொடர்பான எல்லா விஷயமும் அதில் பதிவாகியிருக்கும். ஆக அந்த SSNஐ வைத்து நம்முடைய credit histroyயை சரிபார்ப்பர், அதாவது இந்த நபர் இதுவரை வாங்கிய கடனை சரியான நேரத்தில் திரும்ப செலுத்தி உள்ளாரா, இவரால் இந்த வீடு வாடகையை சரியாக கொடுக்க முடியுமா என்ற விபரத்தை சேகரிப்பர். இந்த credit history, SSN இதை அடுத்தடுத்த வாரங்களில் விரிவாக பார்ப்போம்.  

இதை பொறுத்துதான் நமக்கு வீடு வாடகைக்கு கிடைக்கும். அதுவும் குழந்தை இருக்கும் வீடு என்றால் இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் தான் நிச்சயம் வசிக்கவேண்டும். ஆனால் சில மாநிலங்களில், சில communityகளில் அவ்வளவு strict ஆக கண்காணிப்பதில்லை அதனால் ஒரு அறை கொண்ட வீட்டில் தான் பெரும்பாலோனோர் இருப்பார். அதுவும் படிக்கும் குழந்தை இருக்கும் வீடு என்றால், குழந்தை படிக்கும் பள்ளியிலிருந்து மூன்று மைல்களுக்குள் வீடு இருக்கவேண்டும். அதைக்கேற்றாற்போல் வீடு பார்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த வீடுகள் இவ்வளவு சுலபமாக கிடைத்தால் பிரச்சனையே இல்லை, ஆனால் அதுதான் பிரச்சனை. சில இடங்களில் பள்ளிகளுக்கு admission queue என்று சினிமாக்களில் காண்பிப்பதுபோல நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டும், அதுவும் அண்மையில் எனக்கு தெரிந்த ஒரு communityயில் நடுராத்திரி இரண்டு மணிக்கெல்லாம் சென்று வரிசையில் நிற்க ஆரமித்து விட்டனர்.

இப்படி தான் ஒருவர் வீடு வாடகைக்கு எடுக்க முடியும். முக்கியமான விஷயமே இனிமேல் தான். அதாவது தனி வீடு, apartment வீடு எதுவானாலும் அது மரத்தாலான வீடுதான். ஒரு வீட்டில் கல்லால் கட்டப் பட்ட இடம் எது என்று கண்டுபிடிக்க நிச்சயம் எளிதில் முடியாது. வீடு மொத்தமும் மரத்தில் தான் கட்டப்பட்டிருக்கும். இதற்கு முக்கிய காரணம் பருவநிலை. குளிர் காலம் ஆறு மாதங்கள் இருக்கும், இதில் மூன்று மாதம் வெகு குளிராக இருக்கும். அந்த சூழலில் நம்மூரில் இருப்பது போல concrete வீடுகள் குக்கீரை மேலும் குளுராகிவிடும் என்பதால் அனைத்து வீடுகளுமே மாரத்தான் தான் கட்டப் பட்டிருக்கும். 



குளிர்/கோடை காலங்களுக்கு ஏற்றவாறு AC அல்லது heaterஐ ON செய்துக்கொள்ளலாம். பக்கத்தில் இருப்பது thermostat.
இதுதான் Heater. சூடு காற்று வீடுமுழுதும் பரவும் ACஐ போல.
அனைத்து வீடுகளிலுமே Heater, AC இரண்டுமே இருக்கும். காலத்திற்கு ஏற்றாற்போல படுத்திக்கொள்ள வசதியாக இருக்கும். அதேபோல apartment வீடுகளுக்கு வாடகைக்கு செல்லும்போது அந்த வீட்டில் Heater, AC, Fridge, அடுப்பு (நான்கடுப்பு இருக்கும்) ஏற்கனவே இருக்கும். சில வீடுகளில் அடுப்பு நம்மூர் போல gasஇல் இயங்கும், சில வீடுகளில் currentஇல் இயங்கும். நான் தங்கி இருக்கும் வீட்டில் current மூலம் இயங்கும் அடுப்புதான். gas மூலம் இயங்கும் அடுப்பு என்றால் அதற்கு communityயே பணம் கட்டிக்கொள்ளும், தனியாக ஏதும் நம்மூரில் இருப்பதுபோல gas cylinder எல்லாம் கிடையாது. எங்கிருந்து பைப்பு வரும், எப்படி இருக்கும் என்று கூட தெரியாது. current அடுப்பும் அப்படிதான் எங்கிருந்து அடுப்புக்கு current connection வருகிறது என்பது நாம் தேடி கண்டுபிடிக்க வேண்டும். heater உபயோகமும்  அப்படிதான் gas மூலம் சூடேற்றப்படும் வீடுகளில் அதற்க்கு தனியாக பணம் கொடுக்க தேவை இல்லை. ஆனால் current மூலம் சூடேற்றப் படும் வீடுகளுக்கு குளிர் காலங்களில் அதிகமாக heater உபயோகப் படுத்தினால் current bill அதிகமாக வரும்.

நம்மூரில் கொடுப்பதுபோல நூறு யூனிட்டுக்கு கரண்ட் இலவசமெல்லாம் கிடையாது. இது இவ்வளவு பெரிய தலைப்பாக போகும் என்று நினைக்கவில்லை, வீட்டிற்கு சம்பந்தமான மற்ற பல விஷயங்களை விரிவாக அடுத்த வாரம் எழுதுகிறேன். இணைந்திருங்கள்.


                               நான்காம் அத்தியாயம் அடுத்த வெள்ளிக்கிழமை தொடரும்... 
Blogger Widget