-->

புதன், 23 மே, 2012

இரண்டு ரூபாயில் ஊர் சுத்தலாம்!

சமீப காலமாக மக்கள் மத்தியில் தலை வலியாக இருந்து வருவது விலை உயர்வு.

நமக்குள்ளேயே புலம்பிக்கொள்வதால் ஒன்றும் பெரிதாய் நடந்திவிட போவதில்லை.

பத்து வருடத்திற்கு முந்தய S.Ve.Shekher நாடகம் "நம் குடும்பம் - பெட்ரோல்" இன்று கேட்டுக் கொண்டிருக்கும்போது செய்தி வந்தது, இன்றைய பெட்ரோல் விலை உயர்வு ஏழு ரூபாய் ஐம்பது காசு என்று!

வாய் விட்டு சிரிப்பு வந்தது, காரணம் அப்போதுதான் அந்த நாடகத்தில் ஒரு வசனம் "பெட்ரோல் விலை ஆகாசத்துல விக்குது, பதினோரு ருபாய் ஐம்பது காசுங்கறான்" என்று அந்த வசனம் தொடரும்!

ஆக, எப்பொழுதுமே இந்த விலை உயர்வு இருந்துக் கொண்டே தான் இருக்கிறது! 

சரி, புலம்பிக்கொண்டே நாமும் தொடர்ந்து வாங்கிக்கொண்டிருப்பதால் அதுவும் ஏறிக்கொண்டே போகிறது!

இதனை ஒரு காரணமாகக் கொண்டு,ஒவ்வொருவர் தனி தனியாக செல்ல ஒரு நன்கு சக்கர வாகனம் இருக்கும் இந்த காலத்தில், குறைந்த பட்சம் வாரம் இருமுறையாவது முன்பு சென்றது போல பொது வாகனத்தை பயன் படுத்துவதும்...

இரண்டு தெரு கடந்து இருக்கும் கடைக்கும் வண்டியில் போவது, நடக்கும் தூரம் இருக்கும் உணவு விடுதிக்கு சாப்பிடபோகும் போதும் வாகனத்தை தவிர்ப்பதும்.. நமது பழைய நடை பழக்கத்திற்கு புத்துணர்ச்சி ஊட்டும்!
நண்பர்கள் வீடிற்கு போகும்போதும், வார இறுதியில் நண்பர்களோடு சுற்றும்போதும் நாம் பள்ளியில் படிக்கும்போது சைக்கிளில் சுற்றி உலா வந்தது போல, இன்று அந்த சைக்கிளை தூசு தட்டி, இரண்டு ரூபாய்க்கு முன் பின் சக்கரத்தில் காற்றடித்துக் கொண்டு மும்பு போல ஊர் சுற்றலாம்!

Blogger Widget

செவ்வாய், 15 மே, 2012

நாமெல்லாம் அதிர்ஷ்டக்காரர்கள்!

 முன்பெல்லாம் பெரும்பாலான திரைப்படத்தில் ஒரு வசனம் வரும் "இருவத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி" என்று... அப்படிதான் நாம் இப்பொது ஆரமிக்க போகிறோம்...

நாம் அனுபவித்து, ரசித்து புசித்த சில நினைவுகள்...

அம்மா.. அந்த சேமியா ஐஸ் வேணும்... என்று போட்ட கூப்பாடு; வெயிலில் தள்ளு வண்டிக்காரர் தள்ளிக்கொண்டு வந்த அந்த ஐஸ் பெட்டியிலிருந்து நாம் விரும்பிய பத்து பைசா சேமியா ஐஸ் அவர் எடுப்பதற்குள் , மஞ்சள், ஆரஞ்சு நிற ஐசின் மனம் ஈர்க்கும்... முழங்கை வரை ஒழுகியபடி ருசித்த அந்த குச்சி ஐஸ்.., இன்றைய தலைமுறை அதை காணவில்லை.

கடலை மிட்டாய், தேங்காய் மிட்டாய், தேன் மிட்டாய், பால்கோவா, எள்ளுருண்டை, கமர்கட்டு, சோளம், வேர்கடலை, தட்டை போன்ற பல வகைப்பட்ட தின்பண்டங்களை நாம் பல ஆண்டுகளாக ரசித்து ருசித்திருக்கிறோம், இன்றும் அதன் சுவை கண்டவர்கள் அதை தொடர்கிறோம், இந்த சமயத்தில் ஒரு விஷயத்தை நினைத்து பார்த்தால் சற்று வேதனை அளிக்கிறது...
'குழந்தைகளின் விருப்பத்திற்கு' என்ற ஒரு காரணத்திற்காக மட்டும் பெற்றோர்கள் 'Chetos , Lays , Kurkure' போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய (பிளாஸ்டிக் பையில் பல மாதங்களாக அடைத்து வைத்து, பல இடங்களுக்கு வண்டியில் எடுத்து செலும்போது அதனால் ஏற்பட கூடிய தட்பவெட்பம் காரணமாக பிளாஸ்டிக்கில் உள்ள நச்சு அதன் தின்பண்டங்களிலும் திணிகிறது, இதனால் உடலுக்கு ஊரு விளைகிறது...) பண்டங்களை கேட்கும்போதெல்லாம் வாங்கிக்கொடுக்கிரார்கள்.

நம் காலத்திலெல்லாம் கண்டிராத சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு அடிக்கடி உடம்பு சரியிலாமல் போவதற்கு இவையும் ஒரு வகையில் காரணம்.

மேல் குறிப்பிட்டவை மட்டும் தான் என்று இல்லை, பல ரசாயன கலவை கலந்த திண்பண்டங்கள் இப்போது ஒரு ருபாய் தின்பண்டங்களை விழுங்கிவிட்டன!

பல லட்சம் கொடுத்து வாங்கும் விலை உயர்ந்த வாகனத்திற்கு அதற்கு தேவையான எரிபொருளை ஊற்றினால் மட்டுமே அது சரியாக ஓடும், அதற்கு ஒத்துவராத வேறு விலை உயர்ந்த ஒரு பொருளை ஊற்றினாலும் அது ஓடாது; பழுது பட்டுவிடும், அதனை அதன் சொந்தக்காரார் எப்படி பழுதுபட்டுவிடாமல் பாதுகாக்கிராரோ...

அது போல விலை மதிப்பிற்கு அப்பாற்பட்ட நம் உடலை பாதுகாப்பது நமது கடமை. அப்படி பட்ட உடம்பிற்கு Pizza , Burger, Maggi என்று நம் உடம்பிற்கு ஒவ்வாத பண்டங்களை தின்பதும், ரசாயனம் கலந்த ஆணியையே கரைய செய்யும் குளிர்பானங்களான Coke ,  Pepsi மற்றும் பல வகைகளை குடிப்பதுமாக அல்லாமல் அதிலிருந்து நம்மை நாம் தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

என்ன தான் பெருமைக்காக இக்கால குளிர்பானங்களை வாங்கி வயற்றில் ஊற்றிக்கொண்டாலும்... அவை; பானகம், நீர்மோர், ரோஸ் மில்க் போன்றவற்றின் சுவைக்கு பக்கத்தில் கூட நிற்க முடியாது என்பதை நாம் நன்கு உணர்வோம்!

இனியும் தாமதிக்காமல் நம் நலனில் கவனம் செலுத்துவோம்!

Blogger Widget

சனி, 12 மே, 2012

பெயர் மாற்ற அறிவிப்பு!


எமது வலைப்பூ புதுப் பெயர் பெறுகிறது...

கருத்துக்களம்.காம்

இதுவரை...

மார்ச்சு 2011இல் தொடங்கப்பட்ட எமது வலைப்பூவில் இன்று நாற்பத்து ஒன்றாம் பதுவு வெளியிடப்படுகிறது.

இதுவரை வெளியாகிய நாற்பது பதிவுகளில் எமது சிந்தனையில் தோன்றிய இருபத்தி மூன்று பதிவுகளும், எமது வலைப்பூவின் இணை ஆசிரியர் ஆனந்த் சுரேஷ் பத்தித்த ஆறு கட்டுரைகளும் மட்டும் அல்லாது, பிற ஊடகங்களில் யாம் படித்த கருத்துகள் அடங்கிய கட்டுரையினையும் இங்கு பகிர்ந்துள்ளோம், அவை பின்வருமாறு..

சவுக்கு ஆசிரியர் எழுதிய இரண்டு பதிவுகள், மிஞ்சல் மூலம் நண்பர்கள் பகிர்ந்துகொண்ட ஐந்து கட்டுரைகளும், தினமணியில் வெளியான ஒரு தலையங்கம் உட்பட மூன்று பதிவுகளும், மறைந்த 103  வயதான S.A.P.வரதன் அவர்கள் துக்ளக்கில் எழுதிய 'பேச்சை குறை' என்ற கட்டுரை உட்பட மொத்தம் பதினேழு பதிவுகளும் இங்கு பகிர்ந்துள்ளோம்.

பதிவுகளைப் படிப்பவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும் வகையில் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் இருக்கும் நம் மக்கள் தமிழகத்தின் வானொலி கேட்கும் விதமாக ஹலோ FM இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

இவ்வலைப்பூவில் எழுத விரும்புவோர்கான 'விதிமுறைகளும், நிபந்தனைகளும்' உள்ளடங்கிய PDF கோப்பு(PDF file) இவ்வலைப்பதிவில் எழுத விரும்புவோர்... என்ற தலைப்பின் கீழ இணைக்கப்பட்டுள்ளது.

இளைய தளத்தில் நமது வலைப்பூ நல்ல அங்கீகாரம் பெற்றிட தொடர்ந்து முனைந்துக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில்,  நமது வலைபூவிற்கு வாசகர்கள் அணுக இணைப்பு கொடுக்க உதவும் தளங்களான தினமணி, tamil10, தமிழ்மணம், எழுத்து.காம், udaanz, முகநூல், orkut , ulavu போன்ற தளங்களுக்கு கருத்துக்களம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

Blogger Widget