-->

வெள்ளி, 6 அக்டோபர், 2017

இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 3 | வீடு வாடகைக்கு

இரண்டாம் அத்தியாயத்தின் இறுதியில்....

இப்படியாக வெளியில் மட்டும் அல்ல, வீட்டினுள்ளும் சுத்தமாக வைத்திருக்கிறோமா என்று பார்க்க apartment வீடுகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை state inspection வருவார்கள். முழு வீடும் சுத்தமாக இருக்கிறதா என்று பார்ப்பார்கள். inspection வருவதற்கு ஒருவாரம் முன்னர் ஒவ்வொரு வீட்டுக்கும் அறிவிப்பு வரும். வீட்டில் நாம் இல்லை என்றாலும் அவர்களிடத்தில் இருக்கும் சாவியை வைத்துக்கொண்டு inspection அன்று வருவார்கள், அரசாங்க அலுவலருடன் நாம் தங்கியிருக்கும் apartment மேற்பார்வையாளர் உடனிருப்பார், ஏதேனும் சுத்தம் இல்லை என்றால் $450 டாலர் வரை அபராதம் இருக்கும், அவர்கள் தரப்பிலிருந்து ஏதேனும் மாற்ற வேண்டும் என்று நாம் கூறினால் அவர்களே மாற்றிக் கொடுப்பார். சில இடங்களில் இது மாறுபடும்.


மூன்றாம் அத்தியாயம்:
நான் குடியிருக்கும் communityயின் ஒரு பகுதி.
பல ஆண்டுகளாக இங்கேயே வசித்துவரும் நம் நாட்டவர் தவிர, சமீபத்தில் நம் நாட்டிலிருந்து இங்கு வந்த மக்கள் apartment வீடுகளில் தான் வாசிப்பார். சில மாநிலங்களில் தனி வீடு குறைந்த வாடகையில் கிடைக்கும். சரி, வாடகை எவ்வளவு என்று தானே கேட்கிறீர்கள்? இதோ சில வரிகளில் அதற்கு பதிலளிக்கிறேன்.

முதலில் வீடு எப்படி வாடகைக்கு கிடைக்கும் என்று பார்ப்போம். நமக்கு தெரிந்தவர்கள் பெரும்பாலும் மென்பொருள் துறையில் இருப்பதால் அதையே உதாரணமாக வைத்து சொல்கிறேன். அதாவது, இந்தியாவிலிருந்து நம்மை ஒரு company இங்கே வேலை செய்ய அனுப்புகிறார்கள் என்றால், முதல் இரண்டு வாரங்களுக்கு இங்கே தங்க ஒரு hotel room கொடுப்பார்கள். அந்த இரண்டு வாரங்களில் நாம் வீடு தேடிக் கொள்ள வேண்டும். விடுப்பெல்லாம் கிடைக்காது, காலையில் வேலை, மாலையில் வீடு தேடும் படலம். வேளைக்கு நடுவில், அதுதான் computer, internet இருக்கிறதே! சில இணைய தளங்களில் roommate தேவை என்று நம் மக்கள் விளம்பரம் செய்திருப்பார், bachelor என்றால் ஒரு call செய்து வீடு பிடித்திருந்தால் எப்போது வேண்டுமானாலும் அங்கு போயி தாங்கிக்கொள்ளலாம். 

ஆனால், குடும்பஸ்தர்கள் என்றால், தனி வீட்டு எடுக்க சில கட்டங்களை தாண்ட வேண்டும். முதலில் வீடு கிடைக்கவேண்டும். வீடு வாடகைக்கு என்றெல்லாம் இங்கே board இருக்காது. அதே போல நம் நாட்டில் இருப்பது போல தனி நபர் வீடு வாடகைக்கு விடுவது என்பதெல்லாம் இங்கே பார்க்க முடியாது. Community apartmentகள் தான் பெரும்பாலான இந்தியர்கள் வசிக்கும் இடம். ஒவ்வொரு ஊரிலும் சில பல communityகள் இருக்கும். அந்த மொத்த communityகும் Leasing Office ஒன்றிருக்கும். நமக்கு வீடு வேண்டும் என்றால் அந்த Leasing Officeசுக்கு சென்று விசாரிக்க வேண்டும்.

அந்த Leasing Officeசுக்கு உட்பட்ட community apartmentகளில் எங்கெல்லாம் வீடு காலி இருக்கிறது என்று தெரிவிப்பர். ஒருவேளை வீடு புடித்துவிட்டது என்றால் தடால் என்று வீடு கிடைத்துவிடாது. நம்மூரில் PAN கார்டு இருப்பது போல இங்கே SSN என்று உண்டு. Social Security Number என்று பெயர். ராகு, கேது எந்த கட்டத்தில் இருக்கிறார்கள் என்று மட்டும் தான் சொல்லாது. மற்ற படி நம் தொடர்பான எல்லா விஷயமும் அதில் பதிவாகியிருக்கும். ஆக அந்த SSNஐ வைத்து நம்முடைய credit histroyயை சரிபார்ப்பர், அதாவது இந்த நபர் இதுவரை வாங்கிய கடனை சரியான நேரத்தில் திரும்ப செலுத்தி உள்ளாரா, இவரால் இந்த வீடு வாடகையை சரியாக கொடுக்க முடியுமா என்ற விபரத்தை சேகரிப்பர். இந்த credit history, SSN இதை அடுத்தடுத்த வாரங்களில் விரிவாக பார்ப்போம்.  

இதை பொறுத்துதான் நமக்கு வீடு வாடகைக்கு கிடைக்கும். அதுவும் குழந்தை இருக்கும் வீடு என்றால் இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் தான் நிச்சயம் வசிக்கவேண்டும். ஆனால் சில மாநிலங்களில், சில communityகளில் அவ்வளவு strict ஆக கண்காணிப்பதில்லை அதனால் ஒரு அறை கொண்ட வீட்டில் தான் பெரும்பாலோனோர் இருப்பார். அதுவும் படிக்கும் குழந்தை இருக்கும் வீடு என்றால், குழந்தை படிக்கும் பள்ளியிலிருந்து மூன்று மைல்களுக்குள் வீடு இருக்கவேண்டும். அதைக்கேற்றாற்போல் வீடு பார்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த வீடுகள் இவ்வளவு சுலபமாக கிடைத்தால் பிரச்சனையே இல்லை, ஆனால் அதுதான் பிரச்சனை. சில இடங்களில் பள்ளிகளுக்கு admission queue என்று சினிமாக்களில் காண்பிப்பதுபோல நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டும், அதுவும் அண்மையில் எனக்கு தெரிந்த ஒரு communityயில் நடுராத்திரி இரண்டு மணிக்கெல்லாம் சென்று வரிசையில் நிற்க ஆரமித்து விட்டனர்.

இப்படி தான் ஒருவர் வீடு வாடகைக்கு எடுக்க முடியும். முக்கியமான விஷயமே இனிமேல் தான். அதாவது தனி வீடு, apartment வீடு எதுவானாலும் அது மரத்தாலான வீடுதான். ஒரு வீட்டில் கல்லால் கட்டப் பட்ட இடம் எது என்று கண்டுபிடிக்க நிச்சயம் எளிதில் முடியாது. வீடு மொத்தமும் மரத்தில் தான் கட்டப்பட்டிருக்கும். இதற்கு முக்கிய காரணம் பருவநிலை. குளிர் காலம் ஆறு மாதங்கள் இருக்கும், இதில் மூன்று மாதம் வெகு குளிராக இருக்கும். அந்த சூழலில் நம்மூரில் இருப்பது போல concrete வீடுகள் குக்கீரை மேலும் குளுராகிவிடும் என்பதால் அனைத்து வீடுகளுமே மாரத்தான் தான் கட்டப் பட்டிருக்கும். 



குளிர்/கோடை காலங்களுக்கு ஏற்றவாறு AC அல்லது heaterஐ ON செய்துக்கொள்ளலாம். பக்கத்தில் இருப்பது thermostat.
இதுதான் Heater. சூடு காற்று வீடுமுழுதும் பரவும் ACஐ போல.
அனைத்து வீடுகளிலுமே Heater, AC இரண்டுமே இருக்கும். காலத்திற்கு ஏற்றாற்போல படுத்திக்கொள்ள வசதியாக இருக்கும். அதேபோல apartment வீடுகளுக்கு வாடகைக்கு செல்லும்போது அந்த வீட்டில் Heater, AC, Fridge, அடுப்பு (நான்கடுப்பு இருக்கும்) ஏற்கனவே இருக்கும். சில வீடுகளில் அடுப்பு நம்மூர் போல gasஇல் இயங்கும், சில வீடுகளில் currentஇல் இயங்கும். நான் தங்கி இருக்கும் வீட்டில் current மூலம் இயங்கும் அடுப்புதான். gas மூலம் இயங்கும் அடுப்பு என்றால் அதற்கு communityயே பணம் கட்டிக்கொள்ளும், தனியாக ஏதும் நம்மூரில் இருப்பதுபோல gas cylinder எல்லாம் கிடையாது. எங்கிருந்து பைப்பு வரும், எப்படி இருக்கும் என்று கூட தெரியாது. current அடுப்பும் அப்படிதான் எங்கிருந்து அடுப்புக்கு current connection வருகிறது என்பது நாம் தேடி கண்டுபிடிக்க வேண்டும். heater உபயோகமும்  அப்படிதான் gas மூலம் சூடேற்றப்படும் வீடுகளில் அதற்க்கு தனியாக பணம் கொடுக்க தேவை இல்லை. ஆனால் current மூலம் சூடேற்றப் படும் வீடுகளுக்கு குளிர் காலங்களில் அதிகமாக heater உபயோகப் படுத்தினால் current bill அதிகமாக வரும்.

நம்மூரில் கொடுப்பதுபோல நூறு யூனிட்டுக்கு கரண்ட் இலவசமெல்லாம் கிடையாது. இது இவ்வளவு பெரிய தலைப்பாக போகும் என்று நினைக்கவில்லை, வீட்டிற்கு சம்பந்தமான மற்ற பல விஷயங்களை விரிவாக அடுத்த வாரம் எழுதுகிறேன். இணைந்திருங்கள்.


                               நான்காம் அத்தியாயம் அடுத்த வெள்ளிக்கிழமை தொடரும்... 
Blogger Widget

9 கருத்துகள்:

  1. தங்கள் கருத்துக்கு நன்றி :)
    அடுத்த வாரம் மேலும் புதிய தகவல்கள் உள்ளன :)

    பதிலளிநீக்கு
  2. ஐயா!! தர்மபிரபு!!!! வீசா வாங்கி குடுங்கள் ஐயா!!! சோற்றுக்கு கூட வழி இல்லை ஐயா!!! ஐயா!!!

    பதிலளிநீக்கு
  3. @Singapore Singaram - ஹாஹா.... அதை டிரம்ப் மஹாபிரபு கிட்டதான் கேக்கனும் 😀

    பதிலளிநீக்கு
  4. நிறைய புதிதாகத் தெரிந்து கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. நிறைய புதிதாகத் தெரிந்து கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. மிக்க மகிழ்ச்சி :) தங்கள் கருத்துக்கு நன்றிகள் :)

    பதிலளிநீக்கு