-->

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

பழகலாம் வாங்க!!!

'எப்போ பாத்தாலும் அப்படி அந்த கைபேசியில என்னதான் பண்ணற' என்று கேட்கும் பெற்றோரிடமும் சொல்லப்படும் பதில் பெரும்பாலும், நண்பரோடு குறுஞ்செய்தி பகிர்ந்துக்கொண்டிருக்கிறேன் எனபது தான்... பெரும்பாலும், காலை முதல் மாலை வரை, பள்ளியிலோ,கல்லூரி, பணியிடத்தில் இருப்பவரிடமோ தான் குறுஞ்செய்தி பரிமாரிக்கொள்ளப்படுகிறது, அப்படி செய்வதில் தவறொன்றும் இல்லைத்தான், ஆனால்... பெற்றோர், உடன் பிறந்தவர், சுருக்கமாக சொல்லப்போனால், நம் வீட்டில் இருப்பவரை தவிர, மற்ற அனைவரிடமும் நாம் அரட்டயடிதுக்கொண்டிருப்போம்!

வெளியில் சென்றவர்காக வீட்டில் காத்துகொண்டிருப்பவரை ஒரு நாளில், எத்துனை முறை பலர் நினைதுப்பார்கின்றோம்? வீட்டிற்கு வந்தவுடன் அடுத்த 'புரட்சி' முகப்புத்தகம்! அதன் முன் உட்கார்ந்தவுடன் நேரம் போவது தெரியாமல், இரவு உணவு உண்பதற்கு பல முறை 'அழைப்பு'விடுத்தவுடன் அவசரமாக உண்டு, மீண்டும் 'புரட்சி'யில் ஈடுபடுவது தான் இன்று பலரது வாடிக்கையான செயலாக உள்ளது!

'சுவற்றிடமாவது சொல்லி அழு' எனபது பழமொழி!'

அருகில் இருப்பவரிடம் மனம் விட்டு அரை மணி நேரம் பேசினாலே பாதி பாரம் குறையும்! கேட்பவர், பேசுபவர் இருவருக்கும் தான்!

'முகப்புத்தகத்தில் நிலையை மேம்படுத்தி' நிழல் நண்பர்களிடமிருந்து கருத்துரைகள் பெறுவதில் ஆறுதல் கிடைக்காது... அதனால் சில, பல ஏமாற்றங்கள் தான் நேரும், அவ்வபோது நிகழும் தற்கொலைகளே இதற்க்கு சாட்சி பெங்களூர் ஐ.ஐ.எம் மாணவி தற்கொலை
 
எங்கேயோ இருக்கும் ஒரு நடிகருக்கு உடம்பு சரியில்லை என்றால், தேங்காய் உடைப்பதும், பால் குடம் தூக்குவது, அலகு குத்திக் கொள்வதுமாக பல விசித்திரங்கள் நடைபெறுவது நமது நாட்டில், குறிப்பாக தமிழ் நாட்டில் மட்டும் தான்! பெற்றோருக்காக, உடன் பிறந்தவருக்காக இது போல என்றாவது வேண்டிக்கொண்டதுண்டா? இவ்வளவு பெரிய சாகசங்களெல்லாம் செய்யத்தேவயில்லை, உடனிருந்து ஆறுதல் சொன்னாலே போதும்! அவர்களுக்கு குணமாகிவிடும்!


பகுத்தறிவாளர் M.R.ராதா 1954இல் ரத்தகண்ணீர் படத்தில் தான் நோய் வயப்பட்டிருக்கும் போது...


.....காந்தா, எண்ணப் பார்... என் முகத்தைப் பார்... எப்படி இருந்தவன் எப்படி ஆகிவிட்டேன் பார்த்தாயா காந்தா...


காந்தா...இந்த மாதிரி நேரத்திலே என்னை வீட்டிலே தனியே போட்டுவிட்டு இரவெல்லாம் ஊர் சுத்தும் வேலையிலே இறங்கியிருக்காயாம்...

வேண்டாம் காந்தா...

அதை நான் கேட்கும்போது என் மனம் என்ன பாடு படும் தெரியுமா?
காந்தா... நீ வேறொன்றும் செய்யவேண்டாம்... என் பக்கத்திலே இரு.. அது
எனக்கு போதும்...

என் பக்கத்திலே இருந்துகொண்டு, மருந்து சாப்பிட்டீர்களா? என்று
கேட்டால் என் மனதிற்கு ஆறுதலாக இருக்கும்....
கஞ்சி சாப்பிடுங்கள் என்று சொனால்... மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கும்'


என்று கண்ணீர் விட்டுக் கதறும் ஒரு காட்சி...

இது அன்று திரையில் வந்தது... இது போன்று இன்று பலரிடத்தில் வெளியில் சொல்லமுடியாத ஆதங்கம் இருக்கிறது... அதற்க்கு சற்றும் இடம் கொடுக்காமல், அருகில் இருப்பவரிடம் மனம் விட்டு பேச வேண்டும்! அதனால் உண்டாகும் மகிழ்ச்சி விபரிக்கமுடியாதது!

பணியிடத்தில் இருக்கும் போது வீட்டில் தனிமையில் இருக்கும் மனைவி தொலை பேசி அழைப்பு விடுத்தவுடன், அருகில் இருப்பவரிடம் தாம் அதி பயங்கரமாக வேலை செய்வது போல, 'சிறிது நேரம் கழித்து அழைக்கிறேன்' என்று கூறி இணைப்பை துண்டிப்பதை அவ்வபோது நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்...

தேவையில்லாமல் முகத்தை இருக்கிக்கொள்வதை விடுத்து சிறு புன்னகையுடன் மலரச்செய்து நம் இருப்பினை விரும்புபவரிடம் பழகலாம் வாங்க...
Blogger Widget

2 கருத்துகள்:

  1. முகப்புத்தகம் ஒரு சிலரின் முகத்திரையை கிழிக்கவும் செய்கிறது என்பது தான் உண்மை. தேவை இல்லாமல்.. பொழுது போக்கிற்காக இதனை பயன்படுத்தி முகம் தெரியாத நபர்களின் வலையில் சிக்கி தவித்து மாய்வதை விட..சற்று பொறுமை காத்து, நன் முறையில் இதனை பயன்படுத்தி.. வீட்டிற்கும், நாட்டிற்கும் பயன்படுகிற வகையில் இருந்தால் மட்டுமே மகிழ்ச்சி. அலுவலகப் பணிகளை முடித்து வீடு திரும்பி - சாப்டியா டா? என்று கேட்டாலே முகத்தை முறுக்கி, சுருக்கி.. கோர தாண்டவம் காட்டுகின்ற நடை முறை தன் தற்போது... சாப்பிட்டேன், இல்லை.. என்று கூறுவதற்கு எந்த ஒரு முகப்பா? அய்யகோ! வெறுப்புகளை அலுவலகத்திலேயே மூட்டை கட்டி விட்டு இல்லத்தில் சற்று முகப்பொலிவை காண்பித்து... வாழ்கையின் அர்த்தத்தை பிரதிபலித்து சுற்றார் நட்பினை.. புன்னகை அடைய செய்யலாமே? தற்கொலைகளை தவிர்த்து!!!!

    பதிலளிநீக்கு
  2. ஆனந்த்சுரேசின் கருத்தை
    நானும் வழிமொழிகிறேன்

    பதிலளிநீக்கு