-->

புதன், 25 மே, 2011

திஹார்... சிறை எண் ஆறு...

நன்றி: சவுக்கு.net

சிறைக்கு செல்வதை போல புகைப்படத்திற்கு Pose கொடுத்தபோது எடுத்த படம்...
தமிழகத் சட்டமன்றத் தேர்தலின்போது இலங்கைத்தமிழர்களுக்காக போராடுவதைப்போல நாடகமாடி, சிறை செல்வதைப்போல காவலர் வண்டியில் ஏறி Pose கொடுத்து, அப்படியே காவலர் வண்டியில் வீட்டில் இறங்கியிருப்பார்... ஆனால், இன்று!!!

ஈழத் தமிழினம் சோறில்லாமல், கையிழந்து, காலிழந்து, உயிருக்கு அஞ்சி ஓடிக் கொண்டிருந்த போது, ஏசி காரில் பவனி வந்து, ஏசி அறையில் அமர்ந்துகொண்டு, போலிப் பாதிரியோடும், நக்கீரன் காமராஜோடும் முந்திரி பக்கோடாவைச் சாப்பிட்டுக் கொண்டு அதைப் பற்றி விவாதம் நடத்தினார் கனிமொழி. பதுங்கு குழிக்குள் மக்கள் கிடந்த போது, சென்னை சங்கமம் நடத்தி பவனி வந்தார் கனிமாழி.


அன்று பதவியிலிருந்தபோது மக்களின் நலத்திட்டங்களுக்காக தில்லிக்கு செல்லாதவர் இன்று தன் 'சொந்த' விடயத்திற்காக 'தில்லிக்கு' செல்ல முடிகிறது! ஹ்ம்ம்... மற்றவைத்தான் வேஷம்,  பெத்த பாசம், இல்லாமலா போகும்? 


சிறைக்கு செல்லும்போது Pose குடுக்க முடியாது என்பதை சொல்வதை போல எடுத்தபோது...
இன்று திஹாரில் இருக்கிறார். முதல் நாள் இரவு அவருக்கு வெப்பத்தாலும், கொசுக்கடியாலும் தூங்க முடியவில்லையாம். கழிப்பறைக்கு மறைப்பு இல்லாததால் கஷ்டப் பட்டாராம். விடியற்காலை 2.30 மணிக்குத் தான் உறங்கச் சென்றாராம். காலை 5.30 மணிக்கு சிறை அதிகாரிகள் எழுப்பியதும், இன்னும் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் என்று கேட்டாராம். ஆனால், அதற்கு அனுமதி மறுக்கப் பட்டதாம்.


கனிமொழி அவர்களே…. அய்யன் வள்ளுவர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா ?

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அஇஉறைந் தற்று.

இதற்கு உங்க டாடி என்ன உரை எழுதியிருக்கிறார் தெரியுமா ?

ஒருவருடைய நிழல் அவருடனேயே ஒன்றியிருப்பதைப்போல், தீய செயல்களில் ஈடுபடுகிறவர்களை விட்டுத் தீமையும் விலகாமல், தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும்.

Blogger Widget

5 கருத்துகள்: