-->

செவ்வாய், 2 அக்டோபர், 2018

கனவு, ஏக்கம்!

கனவு:
இவனுக்கு சேகுவேரா ஆகணும்னு,
அவனுக்கு பிடல் காஸ்ட்ரோ ஆகணும்னு,
ஆறு, ஏழு பேருக்கு தான் தான் முதல்வராகணும்னு,
ஒருத்தனுக்கு பிரதமராகணும்னு,
இன்னொருத்தனுக்கு பிரதமராகவே இருந்துடணும்னு,
மதத்தையும், ஜாதியையும் பேசியே மக்களை முட்டாளா வைக்கணும்னு,
மேடைல விடற கதையை மக்கள் மறந்துடுவாங்கன்னு.

ஏக்கம் (மக்களுக்கு):
தரமான கல்வி கிடைக்காதான்னு,
பள்ளி, கல்லூரிகள்ல பீஸ்க்கு பதிலா சொத்தை எழுதி கேக்கறத நிறுத்த மாடங்களான்னு,
மதிப்பெண்ணை பார்க்காம, ஜாதி பாத்து காலேஜுல சீட்டு குடுக்கறத நிறுத்தமாட்டாங்களான்னு,
படிச்ச படிப்புக்கு ஏத்த வேலை கிடைக்காதான்னு, 
படிச்சவன் அரசியலுக்கு வரமாட்டானான்னு,
சினிமா பைத்தியம் பிடிச்சு, அவன் சினிமாவுல நடிக்கிறத பாத்து மக்கள் ஏமாறாம இருக்க மாடங்களான்னு,
எப்படியாவது நாடு முன்னேறிடாதான்னு,
ஊழல் ஒழிஞ்சிடாதான்னு,
நல்லது நடந்துடாதான்னு,
கறுப்புப்பணம் திரும்ப வந்துடாதான்னு,
தூய்மை இந்தியா ஆகிடாதான்னு,
பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை குறைஞ்சிடாதான்னு,
இந்த சிலிண்டர், பெட்ரோல் விலை உயர்வு சுமையையம் மீறி எப்படியாவது வெயில்லயும், மழைலையும் நடந்து, ஓடி, வயசானாலும் சரின்னு கஷ்டப்பட்டு சம்பாதிச்சு கடன் வாங்காம, வர வருமானத்தை வெச்சு எப்படியாவது மாசத்த ஓட்டிடணுமேன்னு,
பாங்குல லோன் வாங்கிட்டு திரும்ப குடுக்காம ஓடி போனவங்க கிட்டேர்ந்து அந்த பணத்த வசூல் பண்ணமாட்டாங்களான்னு,
(ஏன்னா) நம்ம பாங்கு கணக்குலேர்ந்து கம்மி காசு இருந்தா, ஏன் கம்மியா இருக்குனு பைன் போடாம, அச்சச்சோ கம்மியா இருக்கேன்னு பைன் போடாம விடமாட்டாங்களான்னு.
லட்ச கணக்கான கோடிகள்ல கொள்ளை அடிக்கிறவன் தண்டனை அனுபவிக்க மாட்டானான்னு.


Blogger Widget

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக