-->

சனி, 29 செப்டம்பர், 2012

கோசாலை - வாழ்க பல்லாண்டு

அண்மையில் மயிலாடுதுறை சென்றிருந்தேன். மயிலாடுதுறையிலிருந்து திருநாகேஸ்வரம் வழியில் கோவிந்தராஜபுரம் உள்ளது. கோவிந்தராஜபுரத்தில் உள்ள 'கோசாலை'க்கு   சென்றிருந்தேன்.

  
கோசாலையில் நூற்றுக்கணக்கான மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. மாடுகளை வளர்க்க முடியாமல் இருப்பவர்கள், வயதான மாடுகளை அடிமாடிற்கு விடாமல் இயற்கையாக வழியனுப்ப நினைப்பவர்கள் இங்கு வந்து விடுகின்றனர். 



இங்கு வளரும் மாடுகள் நல்ல சுற்றுப்புறத்தில், தாராளமான இடத்தில் வளர்க்கப்பட்டு வருகின்றன. வைக்கோல், புல் போன்று தீனிகள் நல்ல முறையில் கொடுக்கப்பட்டு வருகின்றன. நூற்றுக்கணக்கான பசுக்கள், கிடேரிக்கள் மற்றும் காளைகள் இங்கு வளர்க்கப்பட்டு வருகின்றன.
புற்கள் வெட்டும் இயந்திரம், வெட்டப்பட்ட புற்களை அன்னக்கூடையில் எடுத்து சென்று ஒவ்வொரு மாடுகளுக்கும் இட்டு வர பணியாட்களை நியமித்த்ருக்கிரார்கள்.

 

தம்மை பெற்றெடுத்து ஆளாக்கிய பெற்றோரையே தம் வயதான காலத்தில் உடன் வைத்து சேவை செய்ய மறக்கும் மக்கள் மத்தியில் வயதான பசுக்களை, காளைகளை பரிவோடு அரவணைத்து வரும் கோசாலையை காணவரும் மக்கள் இவர்களை பாராட்ட மறப்பதில்லை!






நாமும் பாராட்டுவோம்...

Blogger Widget

5 கருத்துகள்: