-->

சனி, 29 செப்டம்பர், 2012

கோசாலை - வாழ்க பல்லாண்டு

அண்மையில் மயிலாடுதுறை சென்றிருந்தேன். மயிலாடுதுறையிலிருந்து திருநாகேஸ்வரம் வழியில் கோவிந்தராஜபுரம் உள்ளது. கோவிந்தராஜபுரத்தில் உள்ள 'கோசாலை'க்கு   சென்றிருந்தேன்.

  
கோசாலையில் நூற்றுக்கணக்கான மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. மாடுகளை வளர்க்க முடியாமல் இருப்பவர்கள், வயதான மாடுகளை அடிமாடிற்கு விடாமல் இயற்கையாக வழியனுப்ப நினைப்பவர்கள் இங்கு வந்து விடுகின்றனர். 



இங்கு வளரும் மாடுகள் நல்ல சுற்றுப்புறத்தில், தாராளமான இடத்தில் வளர்க்கப்பட்டு வருகின்றன. வைக்கோல், புல் போன்று தீனிகள் நல்ல முறையில் கொடுக்கப்பட்டு வருகின்றன. நூற்றுக்கணக்கான பசுக்கள், கிடேரிக்கள் மற்றும் காளைகள் இங்கு வளர்க்கப்பட்டு வருகின்றன.
புற்கள் வெட்டும் இயந்திரம், வெட்டப்பட்ட புற்களை அன்னக்கூடையில் எடுத்து சென்று ஒவ்வொரு மாடுகளுக்கும் இட்டு வர பணியாட்களை நியமித்த்ருக்கிரார்கள்.

 

தம்மை பெற்றெடுத்து ஆளாக்கிய பெற்றோரையே தம் வயதான காலத்தில் உடன் வைத்து சேவை செய்ய மறக்கும் மக்கள் மத்தியில் வயதான பசுக்களை, காளைகளை பரிவோடு அரவணைத்து வரும் கோசாலையை காணவரும் மக்கள் இவர்களை பாராட்ட மறப்பதில்லை!






நாமும் பாராட்டுவோம்...

Blogger Widget

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

விநாயகர் சதுர்த்தி - 2012

சிறப்பு மிக்க விநாயகர் சதுர்த்தி விழா, இந்தியாவிலேயே ஓசூரில் மிக சிறப்பாக கொண்டாடும் வழக்கம் பல ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது.


இந்த ஆண்டும், பிரம்மாண்டத்திற்கு சிறிதும் குறை இல்லாமல் விஷ்வ ஹிந்து பரிஷத், ஹிந்து முன்னணி தலைமையில் நடந்து முடிந்த  இவ்விழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து வழி பட்டு சென்றனர்.

இவ்வாண்டு  நடை பெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே, உங்களுக்காக!



























Blogger Widget

வியாழன், 13 செப்டம்பர், 2012

வகை வகையா சிரிப்பு!

சிரிப்பு என்பது என்ன? அது எப்படி வரும்? எப்பொழுது வரும்?


சிரிப்பானது ஒரு குணம்! சிலருக்கு இயல்பாக வந்துவிடும், சிலருக்கு எவ்வளவோ முயன்றாலும் வராது! அப்படியும் வந்தால் அது இயல்பாக சிரிப்பவரின் சிரிப்பை நிறுத்திவிடும்! (சிரிக்க வேண்டுமே என்று தெருவுக்கே கேட்கும் அளவுக்கு சிரிப்பார்கள் சிலர்!)


படம்: Sparkcrews பிரேம்குமார்

சிரிப்பு எப்பொழுதுதான் வரும்? நாம் காண நினைக்கும் ஒருவரை நீண்ட நாட்களுக்கு பிறகோ, நீண்ட இடைவேளைக்கு பிறகு காணும்போது வரும்!

தனியாக சாலையில் நடந்து செல்லும்பொழுது, எப்பொழுதோ நண்பர்களுடன் நடந்த ஒரு நகைச்சுவை நிகழ்வு நினைவுக்கு வந்து, சிரிப்பை அடக்க முடியாமல் வாய் விட்டு சிரிப்பது ஒரு வகை!

தொலைக்காட்சியில் வரும் அசட்டு தனமான நகைச்சுவைக்கும் வரலாம், அரசியல்வாதியின் சொத்து மதிப்பு வெளியிடும்போதும் வரலாம், ஊழல் புகாரில் சிக்கியவுடன் 'நான் நிரபராதி என்று நிரூபிப்பேன்' என்று சொல்லவதை கேட்கும்போதும் பார்க்கும்போதும் வரலாம்!

நடக்காத ஒன்று நடக்கும்போது வருவது ஆச்சர்ய சிரிப்பு!

பேருந்து நிறுத்தத்தில் சரியாக பேருந்தை நிறுத்தும்போது பயனியருக்கும், வயதான ஒருவர் நம்மருகே நிற்கும்போது எழுந்து நின்று அவருக்கு இருக்கை கொடுக்கும் போது... பதில் தெரியாத சிரிப்பு மூத்தவருக்கு, இன்று ஒரு நல்ல காரியம் செய்தோம் என்ற திருப்திகரமான புன்னகை இடம் கொடுத்தவருக்கு, ஒரு பயணி முழு சில்லறை கொடுத்து சீட்டு வாங்கும்போது நடத்துனருக்கு வருவது உளமார்ந்த சிரிப்பு!

எப்பொழுது சிந்திப்போம் என்று வெவ்வேறு இடங்களில் இருந்து நினைத்துக் கொண்டிருக்கும் நண்பர்கள் இயல்பாக தொலைபேசி அழைப்பு விடும்போதும், பரீட்சை முடித்து எதிர்பாராமல் ஒரே நேரத்தில் வெளியில் வரும்போதும் வருவது எதிர்பாராத இயல்பான சிரிப்பு!

குறைந்த மதிப்பெண் எடுத்து, நடுங்கிக்கொண்டு அப்பாவிடம் கை எழுத்து வாங்க நிற்கும்போது, 'சரி... அடுத்த தடவை நல்ல மதிப்பெண் எடு' என ஒரு வரி மட்டும் சொல்லி அடிக்காமல் விடும் போது நம்மை அறியாமல் 'ஐ' என வருவது ஆச்சர்ய சிரிப்பு!

இப்படி ஒவ்வொரு நாளும் நாம் ஒரு விதத்தில் சிரித்து கொண்டு தான் இருக்கிறோம்!

இந்த தொகுப்பை படித்து முடித்த பின்னர், 'அட ஏதோ சொல்ல வரைன்னு படிச்சா... இது தான் விஷயமா என சலித்துக்கொல்பவருக்கு அலட்டல் சிரிப்பு!

நீங்கள் ரசித்த ஒரு சிரிப்பை இங்கு தங்கள் கருத்துக்களாக பதியவும்!
Blogger Widget

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

நற்கனா

நமது வலைதளத்தில் இப்பக்கங்கள் வெளியிடப்படும் என்று முன்பே தெரிந்திருந்தால் , எழுத்துப்பிழை இன்றி இன்னும் அழகாகவே எழுத்துரு கொடுத்திருப்பேன்!

ஒரு புது முயற்சி! எழுதிய பக்கங்களை படங்களாக, இங்கு உங்களுக்காக!

மறவாமல் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்!

விடுபட்ட வரிகள் படத்தின் கீழே உள்ளன...
வெள்ளை உடை அணிந்த இருவர் அவனைத் தூக்கி, தூக்குப்படுக்கையில் இட்டது, "வழி விடுங்கப்பா"  என ஒரு பெரியவர் சத்தம் என பின் நோக்கி அவன்


Blogger Widget

ஞாயிறு, 15 ஜூலை, 2012

பெண்கள் நம் கண்கள்

நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது ஓசுரின்  பிரதான கடைத்தெருவில் நான் கண்ட காட்சி...

ஏழு பேர் அடங்கிய மாணவர்களை உள்ளாடையுடன் அவர்கள் கழுத்தில், ஸ்லேட்டில் ஒரு செய்தி தொங்கவிடப்பட்டவாறே தெரு தெருவாக இழுத்து செல்லப்பட்டனர்.

ஸ்லேட்டில் எழுதப்பட்டிருந்த செய்தி 'நாங்கள் இனி எந்த பெண்ணையும் கேலி செய்யமாட்டோம், பெண்கள் எங்கள் கண்கள்' என்று.

பத்து பேரில் ஒருவர் நல்லவராக இருப்பார்கள் என்று பொதுவாக சொல்லக்கூட முடியவில்லை இன்று, காரணம் அஸ்ஸாமில் நடந்த கொடுமை.

ஒரு பெண்ணை நடு ரோட்டில், பொது மக்கள் நடமாடும் இடத்தில், துளியும் பயமிலாமல் இருபது பேர் மான பங்கப்படுத்தி உள்ளனர். தட்டி கேட்க ஒரு ஈர நெஞ்சமும் முன் வரவில்லை. 

என்பது, தொன்னூறுகளில் திரைப்படங்களில் வருவது போல பொது மக்கள் முன்னிலையில் நடந்த இந்த கொடுமையை சில ஊடகங்கள் வீடியோ பிடிக்க செய்த முயற்சியை , அதை தடுப்பதில் காட்டவில்லை.

நடு ரோட்டில் பெண்ணை மான பங்கப் படுத்திய ஈனப் பிறவிகள்
எடுத்த காட்சியை தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பி, இதில் காவலர் தலையிட நான்கு  நாட்கள் தேவைப்பட்டதா என்று கேட்கும் இந்த ஊடகங்கள், கொடுமை நிகழ்ந்த இடத்தில் இருந்த போதே அதை தடுக்கவில்லை, அந்த ஈனப்பிறவிகளை பிடிக்கவும் இல்லை.

இந்த கொடுமை நடந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் இதே அஸ்ஸாமில் சிப்சாகர் மாவட்டத்தில் எல்லை பாதுகாவலர்கள் (ஜவான்) முப்பது பேர் கொண்ட கும்பல் மற்றொரு பெண்ணை மான பங்கப் படுத்த முயல, பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓர் மக்கள் காப்பாற்றி உள்ளனர்.

இது போதாதென்று சமிபத்தில் தன வீட்டு பணிப்பெண் மான பங்கப் படுத்தி கொலை செய்த வழக்கில் தி.மு.க எம்.எல்.ஏ கைது செய்யப் பட்டுள்ளார். 

பெண்களை நம் போல ஒரு மனித இனமாக பார்க்காமல், காமப் பொருளாக பார்க்கும் இந்த ஈனப்பிறவிகளை வீதியில் பொது மக்கள் முன்பு அரசியல் பாகுபாடின்றி தண்டிக்க வேண்டும், அப்போது தான் இது போல பின்னாட்களில் தவறுகள் நடைபெறாமல் தடுக்க முடியும்.


துபையில் பெண்களை கண்டாலே தண்டனை என்று இங்கு இருக்கும் மக்களுக்கு தெரிந்திருக்கிறது என்றால், அந்த கடுமையான தண்டனையின் வெற்றி அது.

என்ன செய்தாலும் வெளியே வந்து விடலாம் என்ற  எண்ண மிகுதியாலே இங்கு தவறுகள் பெருகி உள்ளது.

அனைத்து மாநில அரசுகளும் தண்டனை சட்டங்களை கடுமை படுத்த வேண்டிய நேரம் இது.
Blogger Widget