-->

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

இலங்கைத் தமிழர்கள் என்ன நினைக்கின்றனர்?

பல வருடங்களாகவே இங்குள்ள அரசியல்வாதிகள் தம்மை; 'தமிழையும், தமிழ் மொழியையும், தமிழர்களையும்' பாதுகாக்க வந்த கடவுளாக நினைத்துக் கொண்டுள்ளனர். வேறு எவரேனும் அதில் பங்குக் கொள்ள நினைத்தால்  அவரை தமிழ் துரோகி என்று பட்டம் கட்டி ஓரம் கட்டிவிட்டு தம்மை தாமே முன் நிறுத்திக்கொள்வர்.

இங்கிருந்தவாறே இலங்கையைப் பற்றியும், இலங்கைத் தமிழரைப் பற்றியும் , இங்கு இவர்கள் கொடுக்கும் பேட்டிகள் இருக்கின்றனவே! அப்பப்பா! ஏதோ இவர்கள் இருப்பதனால் தான் இலங்கை தமிழரெல்லாம் வாழ்வதுபோலவும், இவர்களை அங்குள்ள தமிழர்கள் கடவுளாக பார்பதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு இங்கு இவர்கள் அடிக்கும் லூட்டிகள் கொஞ்ச நஜமல்ல!

உண்மையிலேயே இங்குள்ள அரசியல் 'தலைவர்கள்'(?!) பற்றியும், இங்கு இத்தனை ஆண்டு காலமாக இவர்கள் செய்யும் அரசியல் பற்றியும், இலங்கை தமிழர்களுக்காக இங்கு நடக்கும் போராட்டம் பற்றியும், தனி ஈழ கோரிக்கைகாக நடக்கும் தற்கொலைகள் பற்றியும் இலங்கையில் இருக்கும் தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள்? அங்குள்ள தமிழ் பத்திரிகைகள் என்ன நினைகின்றன?

கொழும்பு, யாழ்பாணம், கிளிநொச்சி, புதுக் குடியிருப்பு, முள்ளி வாய்க்கால், முல்லைத் தீவு, வவுனியா, மட்டக்களப்பு, கண்டி ஆகிய நகரங்களில் ஆறுநாள் தங்கியிருந்து, அங்குள்ள தமிழ் மக்களை, தமிழ்த் தலைவர்களை சந்தித்து, அத்துடன் இலங்கை அரசு துணையோடு ராணுவ அதிகாரிகள், இலங்கை ராணுவத்தில் இணைந்துள்ள தமிழ்ப் பெண்கள், மறுவாழ்வு இல்லத்தில் இருக்கும் முன்னாள் புலிகள் ஆகியோரை சந்தித்து பேசி, எல்லோருடனான உரையாடலையும் வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளை துக்ளக் நிருபர்கள் கொண்டு வந்துள்ளனர்.

சுருக்கமான விவரம் கீழ் வருமாறு...

நேரமின்மைக் காரணமாக Proof Reading செய்யவில்லை, எழுத்துப்பிழை இருப்பின் மனிக்கவும்.

வீ.தனபாலசிங்கம் (ஆசிரியர், 'தினக்குரல்' நாளிதழ்) யாழ்பாணத் தமிழர்:

தமிழக அரசியல்வாதிகளின் போராட்டங்களை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்வது கிடையாது - இலங்கை விவகாரங்களில் பல நிலைபாடுகளை எடுப்பார்கள் - ஆனால் மாணவர்கள் போராட்டம் உணர்வு பூர்வமானது - அதை நாங்கள் பெரிதும் மத்திக்கிறோம். ஆனால் அப்படிப் போராடும் முன்பாக எங்களின் தேவை என்ன என்பதை அறிந்து போராட வேண்டும். எங்கள் கோரிக்கை ஒன்றாகவும், அவர்கள் கோரிக்கை ஒன்றாகவும் இருந்தால் அது அனைவருக்கும் தோல்வியாக இருந்துவிடும்.

தனி ஈழம் என்ற கோரிக்கையை நாங்கள் கைவிட்டு விட்டோம். இவ்வளவு அனுபவங்களுக்கு பின்னர் அதை மீண்டும் கையில் எடுத்தால் அது எஞ்சி உள்ள தமிழரின் எதிர்காலத்தை பாழடித்துவிடும்.

எப்படி இலங்கை அரசாங்கம் எங்களுக்கு உடன்பாடிலாத விஷயங்களை எங்கள் மீது திணிக்கக் கூடாது என்று நினைக்கிறோமோ, அப்படித் தான் தமிழக தமிழர்களும் எங்கள் ஆலோசனை இல்லாமல் எங்கள் மீது எதனையும் திணிக்கக் கூடாது என்று நினைக்கொறோம், உங்கள் அன்புக்கு தலை வணங்குகிறோம், ஆனால் அது எங்களுக்கு அனுகூலமாக இருக்க வேண்டும்.

வீ.ஆனந்த சங்கரி (செயலாளர், தமிழர் விடுதலை கூட்டணி):




தனித் தமிழ்நாடு என்ற கோரிக்கையை நாங்கள் துவங்கும் முன்பே துவங்கியவர்கள் இந்தியத் தமிழர்கள்தான். அந்த கோரிக்கையை நீங்களே கைவிட்டு விட்டீர்கள்.
அதிகாரம் பொருந்திய மாநில அரசு என்ற நிலைக்கு நீங்கள் பழகி கொண்டீர்கள். தற்போது அதில் திருப்தி அடைந்து நிம்மதியாக வாழ்கிறீர்கள். இதையே தான் இங்குள்ள தமிழர்களும் விரும்புகிறோம். அதை பெற்றுத் தரக்கூடிய வகையில் உங்கள் போராட்டம் அமையுமானால் அது பாராட்டுக்குரியது.
பெரும்பாலான சிங்கள மக்கள் நல்லவர்கள். அவர்களை தமிழகத்தில் வைத்து தாக்குவது முகவும் தவறானது. அது எங்களை மேலும் பாதிக்கும்.

யோகேஸ்வரி (மேயர், யாழ்பாணம்):

சுமார் எட்டுக் கோடித் தமிழர்கள் வசிக்கும் தமிழ்நாட்டைத் தனி நாடாக்க முடியவில்லை.
மொத்த ஜனத் தொகை  இரண்டு கோடி கொண்ட இலங்கையில் முஸ்லிம் தமிழர்களைத் தவிர்த்து, மலையகத் தமிழர்களைத் தவிர்த்து, இந்திய வம்சாவழித் தமிழர்களைத் தவிர்த்து, வெறும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுத்தித் தமிழர்கள் சில லட்சம் பேருக்கு மட்டும் ஒரு தனி நாடு கேட்பது எந்த வித்தத்தில் சாத்தியப்படும் என்பதை இந்திய தமிழர்கள் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமான ஆதரவாளர்கள் தவிர, மற்ற எல்லோருமே தமிழீழக் கோரிக்கையை கைவிட்டு பல காலம் ஆகிவிட்டது.
தமிழகத்தில் நிலவும் வதந்திகளை நம்பாதீர்கள். இங்கு வாழ்வது நாங்கள். இங்கு வந்து பாருங்கள்.
தற்போதைய உங்கள் போராட்ட வடிவம், எங்களுக்கு நன்மை தராமல் பாதிப்பு ஏற்படுத்துவதற்கே  வாய்ப்பு அதிகம் என்பதனை தயவு செய்து புரிந்துக்கொள்ளுங்கள்.


கங்கா (பஸ் ஆபரேட்டர், யாழ்பாணம்):

இருத்துப் போர் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகப் போகிறது, இங்கு தனி ஈழம் தான் தீர்வு என்று நாங்கள் நினைத்திருந்தால், இந்த நான்கு ஆண்டுகளில் இங்கு ஒருவராவது உண்ணாவிரதம் இருந்திருக்க மாட்டோமா? ஒருவராவது தீக்குளித்திருக்க மாட்டோமா? பிறகு ஏன் அங்குள்ள இளைஞர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர் என்று புரியவில்லை. கடந்த 30 வருடங்களாக போர் என்ற பெயரில் நரக வாழ்க்கை வாழ்ந்து வந்த நாங்கள் தற்போதுதான் நிம்மதியாக வாழத் துவங்கியுள்ளோம். எங்களின் அரசியல் தீர்வுக்கு உதவுங்கள், அதுதான் நீங்கள் எங்களுக்கு செய்யும் உதவியாக இருக்கும்.


பெயர் சொல்ல விரும்பாத தமிழ் பத்திரிக்கையாளர்:

தமிழக மாணவர்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள் இதுதான். தங்கள் தனி நாடு கோரிக்கை இந்தியாவில் எடுபடாது என்பதை உறுத்தி செய்துக் கொண்ட பின்னர், அந்த ஆசையை கைவிட முடியாத அங்குள்ள சில அரசியல்வாதிகள், அவர்கள் ஆசையை உங்கள் மீதும், எங்கள் மீதும் திணிக்கப் பார்க்கின்றனர்.
ஒரு அரசியல் கூட்டணிக்குப் போனால், இரண்டு டிஜிட் சீட்க்கூட வாங்கமுடியாத சில சின்னச் சின்ன அரசியல் தலைவர்கள், அவர்களின் அரசியல் ஸ்திரத் தன்மைக்காக உங்கள் வாழ்க்கையை பாழாக்குகின்றனர்.
இந்த மண்ணில் எங்கள் இளைஞர்கள் வாழ்க்கையை தொலைத்தது போதும், அங்குள்ள இளைஞர்களான நீங்களும் உங்கள் வாழ்க்கையை துளைத்து விடாதீர்கள்.
இங்கு தனிநாடு என்பது சாத்தியமே இல்லை, எங்களுக்கு நல்லது செய்ய நினைத்தால் அரசியல் தீர்வு, தமிழருக்குச் சம உரிமை என்பதான கோரிக்கைகளுக்காகப் போராடுங்கள்.
அதுதான் யதார்த்த நிலைமை. நாங்கள் வாழும் நாட்டை எதிரி நாடு என்று அறிவிக்கச் செய்வதில் என்ன லாபம் அடைவீர்கள்? இலங்கை மீது பொருளாதாரத் தடை விதித்தால், இன்டுள்ள மக்கள் அரிசி, பருப்பு, எண்ணெய்,சோப்பு, துநிமநிகளுக்கு எங்கே போவோம்? அவை வேறு நாடு வழியாக எங்களுக்கு வந்து சேரும். விளையும் மிக அதிகமாகும். வழியில் யார், யாரோ கொள்ளை லாபம் சம்பாதிப்பார்கள். இதைய நீங்கள் எதிர் பார்க்கிறீர்கள்?

மேலும், கிளிநொச்சி வி.சகதேவன் (போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர்)  , ஆர். யோகராஜன் (ஐக்கிய தேசியக் கட்சி, பிரதான எதிர்க் கட்சி எம்.பி.), என். நடேசன் (இலங்கையில் வெளியாகும் 'தினமுரசு' தமிழ் நாளிதழில் பிரபாகரனைப் பற்றி எழுதிய கட்டுரையின் சுருக்கம்), மனோ கணேசன் (தலைவர், ஜனநாயக மக்கள் முன்னணி, இலங்கையில் வெளியாகும் 'தினக்குரல்' நாளிதழுக்கு 31.3.13 அன்று அளித்த பேட்டி) போன்றவை சென்ற வார துக்ளக் (கீழ் கண்ட அட்டைப் படம் கொண்ட 17-4-2013 இதழ்) இதழில் இடம் பெற்றுள்ளன.


உண்மை நிலவரம் அறிய விரும்புவோர் அதனை முழுமையாகப் படிக்கவும்.


Blogger Widget