-->

சனி, 29 செப்டம்பர், 2012

கோசாலை - வாழ்க பல்லாண்டு

அண்மையில் மயிலாடுதுறை சென்றிருந்தேன். மயிலாடுதுறையிலிருந்து திருநாகேஸ்வரம் வழியில் கோவிந்தராஜபுரம் உள்ளது. கோவிந்தராஜபுரத்தில் உள்ள 'கோசாலை'க்கு   சென்றிருந்தேன்.

  
கோசாலையில் நூற்றுக்கணக்கான மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. மாடுகளை வளர்க்க முடியாமல் இருப்பவர்கள், வயதான மாடுகளை அடிமாடிற்கு விடாமல் இயற்கையாக வழியனுப்ப நினைப்பவர்கள் இங்கு வந்து விடுகின்றனர். 



இங்கு வளரும் மாடுகள் நல்ல சுற்றுப்புறத்தில், தாராளமான இடத்தில் வளர்க்கப்பட்டு வருகின்றன. வைக்கோல், புல் போன்று தீனிகள் நல்ல முறையில் கொடுக்கப்பட்டு வருகின்றன. நூற்றுக்கணக்கான பசுக்கள், கிடேரிக்கள் மற்றும் காளைகள் இங்கு வளர்க்கப்பட்டு வருகின்றன.
புற்கள் வெட்டும் இயந்திரம், வெட்டப்பட்ட புற்களை அன்னக்கூடையில் எடுத்து சென்று ஒவ்வொரு மாடுகளுக்கும் இட்டு வர பணியாட்களை நியமித்த்ருக்கிரார்கள்.

 

தம்மை பெற்றெடுத்து ஆளாக்கிய பெற்றோரையே தம் வயதான காலத்தில் உடன் வைத்து சேவை செய்ய மறக்கும் மக்கள் மத்தியில் வயதான பசுக்களை, காளைகளை பரிவோடு அரவணைத்து வரும் கோசாலையை காணவரும் மக்கள் இவர்களை பாராட்ட மறப்பதில்லை!






நாமும் பாராட்டுவோம்...

Blogger Widget

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

விநாயகர் சதுர்த்தி - 2012

சிறப்பு மிக்க விநாயகர் சதுர்த்தி விழா, இந்தியாவிலேயே ஓசூரில் மிக சிறப்பாக கொண்டாடும் வழக்கம் பல ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது.


இந்த ஆண்டும், பிரம்மாண்டத்திற்கு சிறிதும் குறை இல்லாமல் விஷ்வ ஹிந்து பரிஷத், ஹிந்து முன்னணி தலைமையில் நடந்து முடிந்த  இவ்விழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து வழி பட்டு சென்றனர்.

இவ்வாண்டு  நடை பெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே, உங்களுக்காக!



























Blogger Widget

வியாழன், 13 செப்டம்பர், 2012

வகை வகையா சிரிப்பு!

சிரிப்பு என்பது என்ன? அது எப்படி வரும்? எப்பொழுது வரும்?


சிரிப்பானது ஒரு குணம்! சிலருக்கு இயல்பாக வந்துவிடும், சிலருக்கு எவ்வளவோ முயன்றாலும் வராது! அப்படியும் வந்தால் அது இயல்பாக சிரிப்பவரின் சிரிப்பை நிறுத்திவிடும்! (சிரிக்க வேண்டுமே என்று தெருவுக்கே கேட்கும் அளவுக்கு சிரிப்பார்கள் சிலர்!)


படம்: Sparkcrews பிரேம்குமார்

சிரிப்பு எப்பொழுதுதான் வரும்? நாம் காண நினைக்கும் ஒருவரை நீண்ட நாட்களுக்கு பிறகோ, நீண்ட இடைவேளைக்கு பிறகு காணும்போது வரும்!

தனியாக சாலையில் நடந்து செல்லும்பொழுது, எப்பொழுதோ நண்பர்களுடன் நடந்த ஒரு நகைச்சுவை நிகழ்வு நினைவுக்கு வந்து, சிரிப்பை அடக்க முடியாமல் வாய் விட்டு சிரிப்பது ஒரு வகை!

தொலைக்காட்சியில் வரும் அசட்டு தனமான நகைச்சுவைக்கும் வரலாம், அரசியல்வாதியின் சொத்து மதிப்பு வெளியிடும்போதும் வரலாம், ஊழல் புகாரில் சிக்கியவுடன் 'நான் நிரபராதி என்று நிரூபிப்பேன்' என்று சொல்லவதை கேட்கும்போதும் பார்க்கும்போதும் வரலாம்!

நடக்காத ஒன்று நடக்கும்போது வருவது ஆச்சர்ய சிரிப்பு!

பேருந்து நிறுத்தத்தில் சரியாக பேருந்தை நிறுத்தும்போது பயனியருக்கும், வயதான ஒருவர் நம்மருகே நிற்கும்போது எழுந்து நின்று அவருக்கு இருக்கை கொடுக்கும் போது... பதில் தெரியாத சிரிப்பு மூத்தவருக்கு, இன்று ஒரு நல்ல காரியம் செய்தோம் என்ற திருப்திகரமான புன்னகை இடம் கொடுத்தவருக்கு, ஒரு பயணி முழு சில்லறை கொடுத்து சீட்டு வாங்கும்போது நடத்துனருக்கு வருவது உளமார்ந்த சிரிப்பு!

எப்பொழுது சிந்திப்போம் என்று வெவ்வேறு இடங்களில் இருந்து நினைத்துக் கொண்டிருக்கும் நண்பர்கள் இயல்பாக தொலைபேசி அழைப்பு விடும்போதும், பரீட்சை முடித்து எதிர்பாராமல் ஒரே நேரத்தில் வெளியில் வரும்போதும் வருவது எதிர்பாராத இயல்பான சிரிப்பு!

குறைந்த மதிப்பெண் எடுத்து, நடுங்கிக்கொண்டு அப்பாவிடம் கை எழுத்து வாங்க நிற்கும்போது, 'சரி... அடுத்த தடவை நல்ல மதிப்பெண் எடு' என ஒரு வரி மட்டும் சொல்லி அடிக்காமல் விடும் போது நம்மை அறியாமல் 'ஐ' என வருவது ஆச்சர்ய சிரிப்பு!

இப்படி ஒவ்வொரு நாளும் நாம் ஒரு விதத்தில் சிரித்து கொண்டு தான் இருக்கிறோம்!

இந்த தொகுப்பை படித்து முடித்த பின்னர், 'அட ஏதோ சொல்ல வரைன்னு படிச்சா... இது தான் விஷயமா என சலித்துக்கொல்பவருக்கு அலட்டல் சிரிப்பு!

நீங்கள் ரசித்த ஒரு சிரிப்பை இங்கு தங்கள் கருத்துக்களாக பதியவும்!
Blogger Widget