-->

செவ்வாய், 15 மே, 2012

நாமெல்லாம் அதிர்ஷ்டக்காரர்கள்!

 முன்பெல்லாம் பெரும்பாலான திரைப்படத்தில் ஒரு வசனம் வரும் "இருவத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி" என்று... அப்படிதான் நாம் இப்பொது ஆரமிக்க போகிறோம்...

நாம் அனுபவித்து, ரசித்து புசித்த சில நினைவுகள்...

அம்மா.. அந்த சேமியா ஐஸ் வேணும்... என்று போட்ட கூப்பாடு; வெயிலில் தள்ளு வண்டிக்காரர் தள்ளிக்கொண்டு வந்த அந்த ஐஸ் பெட்டியிலிருந்து நாம் விரும்பிய பத்து பைசா சேமியா ஐஸ் அவர் எடுப்பதற்குள் , மஞ்சள், ஆரஞ்சு நிற ஐசின் மனம் ஈர்க்கும்... முழங்கை வரை ஒழுகியபடி ருசித்த அந்த குச்சி ஐஸ்.., இன்றைய தலைமுறை அதை காணவில்லை.

கடலை மிட்டாய், தேங்காய் மிட்டாய், தேன் மிட்டாய், பால்கோவா, எள்ளுருண்டை, கமர்கட்டு, சோளம், வேர்கடலை, தட்டை போன்ற பல வகைப்பட்ட தின்பண்டங்களை நாம் பல ஆண்டுகளாக ரசித்து ருசித்திருக்கிறோம், இன்றும் அதன் சுவை கண்டவர்கள் அதை தொடர்கிறோம், இந்த சமயத்தில் ஒரு விஷயத்தை நினைத்து பார்த்தால் சற்று வேதனை அளிக்கிறது...
'குழந்தைகளின் விருப்பத்திற்கு' என்ற ஒரு காரணத்திற்காக மட்டும் பெற்றோர்கள் 'Chetos , Lays , Kurkure' போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய (பிளாஸ்டிக் பையில் பல மாதங்களாக அடைத்து வைத்து, பல இடங்களுக்கு வண்டியில் எடுத்து செலும்போது அதனால் ஏற்பட கூடிய தட்பவெட்பம் காரணமாக பிளாஸ்டிக்கில் உள்ள நச்சு அதன் தின்பண்டங்களிலும் திணிகிறது, இதனால் உடலுக்கு ஊரு விளைகிறது...) பண்டங்களை கேட்கும்போதெல்லாம் வாங்கிக்கொடுக்கிரார்கள்.

நம் காலத்திலெல்லாம் கண்டிராத சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு அடிக்கடி உடம்பு சரியிலாமல் போவதற்கு இவையும் ஒரு வகையில் காரணம்.

மேல் குறிப்பிட்டவை மட்டும் தான் என்று இல்லை, பல ரசாயன கலவை கலந்த திண்பண்டங்கள் இப்போது ஒரு ருபாய் தின்பண்டங்களை விழுங்கிவிட்டன!

பல லட்சம் கொடுத்து வாங்கும் விலை உயர்ந்த வாகனத்திற்கு அதற்கு தேவையான எரிபொருளை ஊற்றினால் மட்டுமே அது சரியாக ஓடும், அதற்கு ஒத்துவராத வேறு விலை உயர்ந்த ஒரு பொருளை ஊற்றினாலும் அது ஓடாது; பழுது பட்டுவிடும், அதனை அதன் சொந்தக்காரார் எப்படி பழுதுபட்டுவிடாமல் பாதுகாக்கிராரோ...

அது போல விலை மதிப்பிற்கு அப்பாற்பட்ட நம் உடலை பாதுகாப்பது நமது கடமை. அப்படி பட்ட உடம்பிற்கு Pizza , Burger, Maggi என்று நம் உடம்பிற்கு ஒவ்வாத பண்டங்களை தின்பதும், ரசாயனம் கலந்த ஆணியையே கரைய செய்யும் குளிர்பானங்களான Coke ,  Pepsi மற்றும் பல வகைகளை குடிப்பதுமாக அல்லாமல் அதிலிருந்து நம்மை நாம் தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

என்ன தான் பெருமைக்காக இக்கால குளிர்பானங்களை வாங்கி வயற்றில் ஊற்றிக்கொண்டாலும்... அவை; பானகம், நீர்மோர், ரோஸ் மில்க் போன்றவற்றின் சுவைக்கு பக்கத்தில் கூட நிற்க முடியாது என்பதை நாம் நன்கு உணர்வோம்!

இனியும் தாமதிக்காமல் நம் நலனில் கவனம் செலுத்துவோம்!

Blogger Widget

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக