-->

புதன், 15 பிப்ரவரி, 2012

தமிழின் பெருமை - கம்போடியாவில்!

நன்றி: ஜெயா தொலைகாட்சி, கேள்வி நேரம் நிகழ்ச்சி.

உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?


இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்று இது! இந்த அதிசயத்தைப் நம் மக்களுடன் பகிர்ந்துக்கொள்ள நான் பெருமையடைகிறேன். ஆம்  உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில்.

இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா?, வைணவத் தளமான இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே பெரியது!!

இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!!


இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக "புத்த" வழிபாடு தளமாக மாற்றப்பட்டு. இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது!.

பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத்தொடங்கியது.பின்னர் 1586 ஆம் ஆண்டு  "António da Madalena" என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது, அதை அவர் "is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of." என்று கூறியுள்ளார்.

பின்னர் Henri Mouhot என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது. அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged என்று குறிப்பிட்டுள்ளார்!! பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!!

இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார்.ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது இதில் இன்னொரு சிறப்பு "கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக"ஆட்சிப் பொறுப்பு பொறிக்கப்பட்டுள்ளது!.

இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம், கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை!! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது!! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே!!

இன்றும் தாய்லாந்தில் மன்னர், ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன் நமது திருப்பாவையை தாம் பாராயணம் செய்து பின்னர் பதவி ஏற்பதுதான் வழக்கத்தில் உள்ளது.
Blogger Widget

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

ஒரு பிடி அரிசி!

உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம் இப்படி மனித வாழ்விற்கு இன்றியமயாதவைகளுள் உணவும் ஒன்று.

எக்காலமாயினும் விவசாயம், உணவு பற்றி பேசாமல் இருக்க முடியாது. இப்பொழுதும் இரு வேறு மாநிலத்தவர் சந்தித்துக்கொண்டால், முதல் ஐந்து நிமிடங்களுள் வருவது உணவைப்பற்றிய பேச்சு.

இப்படியாக உணவு வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அப்படிப்பட்ட உணவை எம்மதமாயினும் உண்பதற்கு முன் தங்கள் கடவுளுக்கு நன்றி தெரிவித்து விட்டு தான் உண்ண தொடுங்குகின்றனர்.

கிறிஸ்துவம்
Bless O Lord, this food to our use,
And us to thy loving service;
And make us ever mindful of the needs of others,
For Jesus' sake. Amen.

இஸ்லாம்
Bismillahi wa 'ala baraka-tillah.

ஹிந்து
Brahmarpanam Brahma Havir 
Brahmagnau Brahmana Hutam
Brahmaiva Tena Ghantavyam
Brahmakarma Samadhinaha

உணவை மிச்சம் வைக்காமல் உண்ண வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையும், சிறு வயது முதலே இதுதான் பெற்றோரால் புகட்டப்படுகிறது.

சமிபத்தில் கேள்விப்பட்ட ஒரு விஷயம் நினைவிற்கு வருகிறது...

ஒருவரின் நண்பர் மேற்படிப்பிற்காக ஜெர்மனி சென்றிருந்தார்.
சென்ற புதிதில் பிற நண்பர்களுடன் ஊர் சுற்றிப்பார்க்க சென்றபோது ஒரு உணவகத்தில் வேண்டிய உணவுக்கான பணம் செலுத்தி அதற்காக  காத்துகொண்டிருந்தார், அதே சமயம் அங்கு உணவருந்திக்கொண்டிருந்த பெரியவர்கள், தங்கள் வயதொத்தவர் அனைவரும் சிறு பருக்கையும் மிச்சம் வைக்காமல் உண்பதைப்பார்த்து ஆச்சர்யப்பட்ட இந்த நபர், தன் உணவு வந்ததும் அதை அரைகுறையாக உண்டு மற்ற நண்பரை  சந்திக்க நேரம் ஆகிவிட்டது என்று வெளியே செல்ல முற்பட்டிருக்கிறார்.

அப்போது அங்கிருந்த ஒரு வயதான பெண்மணி சட்டென்று ஒரு எண்ணிற்கு தொடர்பு கொண்டு  ஏதோ  தெரிவிக்க, சிறிது  நேரத்தில்  அங்கு உணவு பாதுகாப்பு காவலர்  ஆஜர். உணவை தட்டில் மிச்சப்படுத்திய இந்த நபருக்கு தண்டனை தொகையாக ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயிக்க, இவர் வாக்குவாதம் செய்திருக்கிறார், என்  பணம் நான் மிச்சம் வைக்கிறேன் என்று.


அதற்கு அந்த காவலர், பணம் உங்களுடையதாக இருக்கலாம் , ஆனால்  விளைவிப்பது  எங்கள்  விவசாயிகள்  (Money might be yours, Resource is Ours!). நீங்கள் மிச்சம் செய்யும் இந்த உணவை நீங்கள் வாங்காமல் இருந்திருந்தால் வேறொருவருக்கு இது போய் சேர்ந்திருக்கும். அதனால் தான் இந்த தண்டனை தொகை என்று அந்த காவலர் விளக்கியவுடன் தெளிவு பிறந்தது நமது இந்திய நபருக்கு.

அது நமக்கும் பொருந்தும், வேண்டிய அளவு மட்டும் உணவை பெற்றுக்கொண்டால், வீணாக்காமல் வேறொருவருக்கு அதனை உணவாக்கலாம்.


இதனை நமது மத்திய அரசு உணர்ந்தால், பல லட்சம் டன் எடை கொண்ட அரிசி, கோதுமை மூட்டைகள் வெயிலிலும் , மழையிலும் கடந்து வீணாகாமல்   உணவுக்காக  ஏங்கியிருக்கும்  பல  கோடி  மக்களுக்கு  உதவும்.


சில தனியார்களுக்கு உதவ சொற்ப அளவில் செலவு செய்ய வேண்டிய குடான் (Godown)  அமைக்காமல் விலை மதிப்பில்லா உணவு வகைகளை பாழ் செய்கிறது.


"உண்ணும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே  
என்றும் உமக்கே நாம் நன்றி சொல்லுவோம்..." என்ற வரிகளை நினைவுகூர்ந்து...
எது எப்படியோ போகட்டும் என்றில்லாமல், நம்மால் முடிந்ததை நாம் கடைபிடித்து உணவை வீணடிக்காமல் மற்றவரில் ஒருவேளை உணவான ஒரு பிடிஅரிசியைக் காப்போம்.
Blogger Widget