-->

செவ்வாய், 15 மார்ச், 2011

இதிலென்ன தவறு?

நம் நாட்டில் இருக்கும் பல நடுத்தர குடும்பங்கள் வசிப்பது வாடகை வீட்டில்.
பலர், பல ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசிப்பது உண்டு. குறைந்த பட்சம் 15 ஆண்டுகளாவது ஒரே வீட்டில் வசிப்பது உண்டு.
தன் குடும்ப சூழல் காரணமாக வீடு மாறுபவர்களும், வீட்டில் மக்கள் தொகை பெருகிவிட்டலோ 'இடமின்மை' காரணமாக வீடு மாறுபவர்கள் உண்டு.

மேலும், தற்கால கணினி மயமான சூழலில், கணிப்பொறியாளராக பணிபுரியும் பலர், தன் திறமைக்கேற்ப, அனுபவத்திற்கேற்ப மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பணிபுரியும் நிறுவனத்தைவிட்டு, வேறு இடம் மாறுவதும் வழக்கமாகிவிட்டது.

இது போல, தன் சௌகர்யத்திர்க்கேர்ப்ப பால் வாங்கும் கடை, மளிகை சாமான் வாங்கும் கடை முதல் பனி புரியும் நிறுவனம் வரை தனக்கு ஒத்து வராத அனைத்தையும் நாம் மாற்றிக்கொண்டுதான் இருக்கிறோம்.

இப்படி இருக்கும் நாம், அரசியல் செய்திகளை படிக்கும்போது தினம் சொல்லும் ஒரு வாக்கியம் இது 'கட்சி விட்டு கட்சி மாறிக்கொண்டிருக்கிறானே! இவனெல்லாம் ஒரு மனுஷனா!!!'

இது என்ன நியாயம்? உங்கள் சௌகர்யத்திர்க்கேர்ப்ப நீங்கள் பலவற்றை மாற்றும்பொழுது, ஏன் இந்த அரசியல்வாதி கட்சி மாறக்கூடாது? ஏன் சில பல கூட்டணி மாற்றி அமைக்கக்கூடாது? அவர்களுக்கு அந்த உரிமை இல்லையா? தன் தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், தன் செல்வாக்கினை மதிக்கும் பொழுது கூட்டணி மாற்றியமைப்பதும் தன் கட்சியினை வலுப்படுத்தும் முயற்சி, இதேலென்ன தவறு?
Blogger Widget

2 கருத்துகள்:

  1. Its a good post considering it under the humor category. But politician who leaves the principles of his party to join another party which prescribes its own, and completely opposite principles cannot be commended.

    பதிலளிநீக்கு
  2. Changing home is different from changing whole principle of life. Even when we shift to other location, we consider the convenience of all the members of the family. when a politician decide to change, his followers who believed in his principle are left unhelped and the ambiguity increses if the newly joined one have exactly opposite principles what he followed.

    பதிலளிநீக்கு